Saturday, March 11, 2023

துரை வைகோ முயற்சியில் கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்!

"ஆதாயமில்லா மக்கள் பணி

சமரசமில்லா மக்கள் நலன்"
என்று நான் முன்வைத்த எனது பொதுவாழ்வு குறிக்கோளுடன் எனது பயணமும், தொண்டும் தொடர்கிறது...
அரசியல் பொதுவாழ்வு
எனும் கருவியின் துணையோடு
மக்கள் நலப் பணிகளை செய்திடுவோம்!
தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தேர்தலில்,
தலைவர் வைகோ அவர்களின் அனுமதியோடு, நான் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய போது;
மது ஒழிப்புப் போராளி
பாட்டி மாரியம்மாள் பிறந்த கரிசல்குளம், ஆலமநாயக்கர் பட்டி கிராமங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தேன்..
அப்போது ஊர் மக்கள் ஒன்று திரண்டு
21 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் ஊரில் இருந்த A.548 கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், சில பல காரணங்களால் கலைக்கப்பட்டு விட்டது என்றும்,
விவசாயிகள் உரங்கள் பெறுவதற்கும்,
அன்றாட வரவு செலவு மேற்
கொள்வதற்கும், நகைக்கடன் வாங்குவதற்கும், இதர அரசின் உதவிகளை பெறுவதற்கும் பெரும் சிரமப்படுவதாகவும், இந்த தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், அவ்வாறு மீண்டும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் கொண்டுவரப்பட்டால் கரிசல்குளம், ஆலமநாயக்கர்பட்டி, ஆலடிபட்டி, அய்யாபுரம் ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3500 குடும்பங்களுக்கும் அருகில் உள்ள இதர கிராமங்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்றும் என்னிடம் தெரிவித்தனர்..
இந்த கோரிக்கையை எப்பாடுபட்டேனும் நிறைவேற்றித் தருகிறேன் என வாக்குறுதி அளித்தேன்.
தேர்தல் முடிந்தது..
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமே என்ற கவலை மனதில் எழுந்தது.
அன்றைய கூட்டுறவு துறை அமைச்சர்
அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களை திண்டுக்கல் சென்று சந்தித்து
இக்கோரிக்கையினை வலியுறுத்தினேன்.
இதற்காகவா சென்னையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல் வந்தீர்கள்?
என்று கேட்டார்..
ஆம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி எப்படியும் நிறை வேற்ற வேண்டுமே என்ற அக்கறையிலும், கவலையிலும் இது ஒரு முக்கிய வேலை என்று கருதித்தான் தங்களை தேடி வந்தேன் என்றேன்.
தலைவர் வைகோ அவர்களும் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
மிகுந்த அக்கறையுடன் பேசிய அமைச்சர் அவர்கள், நிச்சயம் செய்து தருகிறேன் என்று கூறினார்..
அப்போது திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சகோதரர் என்.செல்வராகவன் அவர்களும் உடன் இருந்தார்.
தொடர்ந்து நான் மூன்று முறை அமைச்சர் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களை சந்தித்து வலியுறுத்திக்
கொண்டே இருந்தேன்.
தலைவர் வைகோ அவர்களும் ஏழு, எட்டு முறை அமைச்சரிடம் பேசி நினைவூட்டி வந்தார்...
நமது இயக்கத் தோழர்கள் யாரேனும் ஏதேனும் கோரிக்கைகளுக்காக அமைச்சரை சந்திக்க நேர்ந்த வேளைகளில் கூட, கரிசல்குளம் சொசைட்டி வேலை நடந்து கொண்டிருக்கிறது என்பதை வைகோ அண்ணனிடமும், தம்பி துரை வைகோவிடம் சொல்லிடுங்க என்று சொல்கிற அளவிற்கு ஊர் பெயர் அமைச்சர் அவர்களுக்கே மனப்பாடம் ஆகிவிட்டது...
இதற்கிடையே மகள் பட்டம் பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று ஊருக்கு அழைத்து வர நான் கனடா சென்றிருந்தேன். அப்போதும் இந்த கோரிக்கை என்னவாயிற்றோ என்று கவலை எழுந்தது..
கூட்டுறவு துறையில் அந்த கோப்பு என்ன நிலையில் இருக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்..
எனது விருப்பத்தின் பேரில் துணை பொதுச்செயலாளர் சகோதார் தி.மு.இராசேந்திரன் சென்னை சென்று கூட்டுறவு சங்க பதிவாளர், கூடுதல் பதிவாளர் மற்றும் திருநெல்வேலி இணைப்பதிவாளர், துணைப்பதிவாளர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து சொன்னார்..
ஊர் திரும்பிய சில தினங்களில்
மீண்டும் அமைச்சரை சந்தித்தேன்..
உடனடியாக அமைச்சர் அவர்கள்,
"வைகோ அண்ணன் தாயார் பிறந்த ஊர், வைகோ அண்ணன் பையன் துரை என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருக்கிறார்;
தமிழ்நாட்டில் மூடப்பட்ட சங்கங்களில் முதலில் தொடங்கப்படும் சங்கமாக கரிசல்குளம் சங்கம் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கண்டிப்பாக உத்தரவிட்டார்கள்.
அந்த உத்தரவைத் தொடர்ந்து சங்கத்தை தொடங்குவதற்
கான சட்டபூர்வ கடமைகளை அன்றைய திருநெல்வேலி சரக இணைப்
பதிவாளர், அதன் பின்னர் புதிதாக உருவான தென்காசி சரக இணைப்பதிவாளர், சங்கரன்கோவில் சரக துணைப் பதிவாளர்,
நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி பிரதிநிதி, கலைத்தல் அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர்
மேற்கொண்டனர்.
இவர்கள், கிராமத்திற்கு வந்து, சங்கத்தை தொடங்குவதற்கு உரிய சட்டபூர்வ கடமைகள் குறித்து சங்கத்தின் பழைய உறுப்பினர்
களிடமும், பொது மக்களிடமும்
விவரித்தனர்.
அதன்படி,
1) கலைக்கப்பட்ட சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி சங்கத்தை உயிர்ப்பிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.;
2)ரூபாய் ஆறு லட்சம் வைப்பு நிதி செலுத்த வேண்டும்;
3)ஏழு பேர் கொண்ட நிர்வாகக்குழு ஒன்றை அமைத்திட வேண்டும்...
4)செவல்குளம் சங்கத்தில் இருந்து இந்த சங்கத்தை பிரிக்க ஆட்சேபமில்லை என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்..
5) பழைய கட்டிடம் பழுதடைந்துவிட்டதால் சங்கம் இயங்கிட பாதுகாப்பான கட்டிடமும், கிட்டங்கி ஒன்றும் வேண்டும்
இந்த சட்டபூர்வ கடமைகளை நிறைவேற்றிட, பயன்பெறும் நான்கு கிராமங்களைச் சேர்ந்த பொது நலப் பார்வை கொண்ட பிரதிநிதிகளை அழைத்து மீண்டும் பேசினேன்..
கட்சி, சாதி, கிராமம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையாக இருந்து சட்டப்படி செய்ய வேண்டிய கடமைகளைச் செய்திடுங்கள் என
வேண்டுகோள் விடுத்தேன்..
செவல்குளம் கூட்டுறவு சங்கத் தலைவர் சகோதரர் முருகேஸ்வரன் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உடனே தீர்மானம் நிறைவேற்றித் தந்து உதவினார்.
எனது விருப்பதற்கு இணங்க
கிராமத்தில் நடந்த ஒவ்வொரு ஆய்விலும், கூட்டத்திலும் துணைப் பொதுச்செயலாளர்
தி.மு.இராசேந்திரன் கலந்து கொண்டு தலைவரும், நானும் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை பொது மக்களிடம் விவரித்து வந்தார்..
கழக ஒன்றியக்குழு உறுப்பினர் சகோதிரி திருமதி சங்கீதாவும், அவரது கணவர் தம்பி சு.கணேஷ் குமாரும்,
ஊர் நலனில் அக்கறை கொண்ட பல இளைஞர்களும், பெரியோர்களும்
நான்கு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மேற்கண்ட சட்டக் கடமைகளை செய்து முடித்தனர்.
வைப்பு நிதியினையும் மக்கள் மனமுவந்து வழங்கினர்.
இந்த ஊரைச் சேர்ந்தவரும், மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி
வருபவருமான தலைமைக்கழக வழக்கறிஞர் சகோதரர் பா.சுப்பாராஜ் அவர்களும்; கலைக்கப்பட்ட சங்கத்தால் இழப்புக்கு ஆளானவர்களில் ஒருவரான அண்ணன் கரிசல்குளம்
மாரியப்பன் அவர்களும்
இம்முயற்சிகளுக்கு உதவியாக இருந்தனர்.
(இதற்காக ஒத்துழைத்த ஒவ்வொருவரையும் உரிய நேரத்தில் பாராட்ட திட்டமிட்டு உள்ளேன்)
இதற்கிடையே, கூட்டுறவுத் துறையின் புதிய அமைச்சராக அண்ணன் கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்...
ஏதேனும் தடங்கல் ஏற்பட்டு
விடக்கூடாதே என்ற கவலை மீண்டும் மனதில் எழ அண்ணன் கே.ஆர்.பெரிய கருப்பன் அவர்கள் கூட்டுறவுத்
துறைக்கு பொறுப்பேற்ற சில தினங்களிலேயே சந்தித்து இக்கோரிக்கை குறித்து முழுமையாக விவரித்து முறையிட்டேன்..
கோப்பினை ஆய்வு செய்த அமைச்சர் அவர்கள், எல்லா நடைமுறைகளை
யும் சட்டப்படி நீங்கள் செய்து முடித்து விட்டீர்கள். நிச்சயமாக கரிசல்குளம் சொசைட்டி மீண்டும் இயங்கும்;
அதற்கு நான் உறுதி அளிக்கிறேன் என்று திட்டவட்டமாகத் கூறினார்..
இதனால் என் மனதில் எழுந்த கவலை நீங்கி மகிழ்ச்சி ஏற்பட்டது.
அப்போது நீங்களே ஊருக்கு வந்து கரிசல் குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முறைப்படி தொடங்கி வைத்திட வேண்டுமென அன்பு வேண்டுகோள் விடுத்தேன்...
இயக்கத் தந்தை வைகோ அவர்களும் அலைபேசி வழி அழைப்பு விடுத்தார்கள்.
நிச்சயமாக உங்கள் விருப்பப்படி
நானே அந்த கிராமத்திற்கு நேரில் வந்து தொடங்கி வைக்கிறேன்.. ஈரோடு தேர்தல் முடிந்த உடன் தேதியை முடிவு செய்து கொள்வோம் என்று கூறினார் அமைச்சர்..
நாட்கள் சென்று கொண்டு இருந்தது..
எனக்கும் ஓயாத பணிகள்...
என்றாலும் தொடக்க விழா தேதியை உறுதி செய்திட இன்று காலை அமைச்சர் அவர்களை தலைவர் வைகோ அவர்களும், நானும் தொடர்பு கொண்டு பேசினோம்..
மாண்புமிகு அமைச்சர் அண்ணன் கே.ஆர்.பெரிய கருப்பன் அவர்கள்,
எமது வேண்டுகோளை ஏற்று, வருகின்ற 2023 மார்ச் 26 ஞாயிறு காலை 10 மணிக்கு ஆலமநாயக்கர் பட்டி கரிசல்குளம் கிராமத்திற்கு நேரில் வந்து மீண்டும் உதயமாகும்
கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை தொடங்கி வைத்திட அன்புடன் இசைவளித்து உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
எந்தக் குற்றச்சாட்டுகளுக்காக இந்த கூட்டுறவு சங்கம் கலைக்கப்பட்டதோ அதே குற்றச்சாட்டுகளுக்காக கலைக்கப்பட்ட எந்த ஒரு சங்கமும் தமிழ்நாட்டில் மீண்டும் தொடங்கப்பட
வில்லை. ஒரே விதிவிலக்காக அ.கரிசல்குளம் தொ.வே.கூ.சங்கம் தான் தொடங்கப்படுகிறது...
அதற்கு காரணம், நமது பரிந்துரை நூறு விழுக்காடு மக்கள் நலன் சார்ந்தது என்று தமிழ்நாடுஅரசும், கூட்டுறவு துறை அமைச்சரும் நம் மீது கொண்டிருக்கும் ஒற்றை நம்பிக்கை தான்.
சுமார் 15 மாத கால இடைவிடாத தொடர் முயற்சியின் காரணமாக நான்கு கிராம மக்களிடம் உறுதி அளித்த தேர்தல் வாக்குறுதியை இதோ.. நிறைவேற்றி தந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படுகிறது...
அரசியல் பொதுவாழ்வு எனும் கருவி இதுபோன்ற மக்கள் நலப்
பணிகளைச் செய்திட துணையாக விளங்குகிறது...
அந்த கருவியின் துணை கொண்டுதான், நாடு முழுவதும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்ற பல்வேறு பொதுநல கோரிக்கைகளை உரிய துறைகளில் முறையிட்டு என்னால் இயன்றமட்டும் பொதுநல நோக்கோடு தீர்வுகாண கடமையாற்றி வருகிறேன்..
"ஆதாயமில்லா மக்கள் பணி
சமரசமில்லா மக்கள் நலன்"
என்று நான் முன்வைத்த எனது பொதுவாழ்வு குறிக்கோளுடன் எனது பயணமும், தொண்டும் தொடர்கிறது...
தொடங்கப்பட உள்ள கரிசல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை எவ்வித தவறுக்கும் இடம் தராமல் முழுமையாக மக்களுக்கு பயன்படும் வகையில், பொறுப்பேற்கும்
நிர்வாகத்தினரும், கூட்டுறவுத்துறையினரும், சங்க உறுப்பினர்களும் ஒருமித்த உணர்வோடு நடத்திட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்..
மாண்புமிகு தமிழ்நாடு முதல்அமைச்சர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையிலான ஆட்சியில், 21 ஆண்டுகளுக்கு பிறகு கலைக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை மீண்டும் உயிர்ப்பித்து இயக்கிட நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு அமைச்சர்கள் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களுக்கும், அண்ணன் கே.ஆர்.பெரிய கருப்பன் அவர்களுக்கும், பொறுப்பாக கடமையாற்றி உதவி வருகின்ற தென்காசி கூட்டுறவு துறை இணைப் பதிவாளர், சங்கரன்கோவில் துணைப் பதிவாளர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும், சீரிய ஒத்துழைப்பை நல்கி வரும் நான்கு கிராம பொது மக்களுக்கும், தன்னார்வத்துடன் இதற்காக பாடுபட்டுவரும் நான்கு கிராம இளைஞர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்து மகிழ்கின்றேன்.
அன்புடன்
துரை வைகோ
தலைமைக கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
11.03.2023

No comments:

Post a Comment