Friday, November 29, 2019

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோவின் தனி ஒருவர் தீர்மானம் (Private Member Bill)

மத்திய மாநில உறவுகள் குறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கடந்த வாரம் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் ஒரு தீர்மானத்தின் சுருக்கமான முன்வரையை 29-11-2019 அன்று அறிமுகம் செய்து இருந்தார்.

அப்படி பல உறுப்பினர்கள் பல தீர்மானங்களைத் தாக்கல் செய்து இருப்பார்கள்.
எந்தத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது என்பதை குலுக்கல் சீட்டு மூலம் தேர்ந்து எடுப்பார்கள்.
அந்தத் தீர்மானத்தின் மீது விரிவான கருத்துப் பரிமாற்றத்திற்கு இடம் தருவார்கள்.
அப்படி நடைபெற்ற குலுக்கலில் வைகோ அவர்கள் பெயர் முதலாவதாகத் தேர்வு பெற்றது.
எனவே நேற்று 29.11.2019 அன்று பிற்பகல் 2.30 மணி அளவில், அந்தத் தீர்மானம் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வைகோ அவர்கள் தீர்மானத்தைத் தாக்கல் செய்து 30 நிமிடங்கள் நீண்ட விளக்கம் அளித்து உரை ஆற்றினார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மாநில சுயாட்சிக்காக எழுப்பிய குரல்,
டாக்டர் கலைஞர் 1974 இல் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம், அவர் அமைத்த ராசமன்னார் குழு அளித்த பரிந்துரை,
அகாலிதளம் கட்சியின் அனந்தபூர் சாகேப் தீர்மானம்,
தேசிய மாநாட்டுக் கட்சி, காஷ்மீர் மாநிலத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சி மாநாடு தீர்மானம்,
கல்கத்தாவில் சிபிஎம் ஜோதிபாசு அவர்கள் இடதுசாரிகள் நிறைவேற்றிய தீர்மானம், அனைத்தையும் தெளிவுபட எடுத்து உரைத்தார்.
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான மாநில சுயாட்சி உரிமைக்காக வலுவாக குரல் எழுப்பினார்.
இந்திய அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து விரிவான விவாதம் நடைபெற்றது.
அவரது உரையை உறுப்பினர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், வைகோ மிகச் சிறந்த பேச்சாளர் என்றார்.
1. சுக்லா- பா.ஜ.க
2. ஜெயராம் ரமேஷ்- காங்கிஸ்
3. அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
4. டெரிக்.ஓ.பிரையன்- திரிணமுல் காங்கிரஸ்
5. விஜிலா சத்தியானந்த்- அதிமுக
6. விஷம்பர் பிரசாத் நிஷாத்- சமாஜ்வாதி
7. டாக்டர் அமர பட்நாயக்- பிஜூ ஜனதா தளம்
8. டி.கே.ரங்கராஜன்- சிபிஎம்
9. பேரா மனோஜ் குமார் ஜா- ராஷ்ட்ரிய ஜனதா தளம்
10. ராகேஷ் சின்கா- பா.ஜ.க.
11. சஞ்சய் சிங்- ஆம் ஆத்மி
12. சுதஷன்ச திரிவேதி- பா.ஜ.க
13. சுதான்சு திரிவேதி

ஆகிய 13 உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.
அவர்கள் வைகோ கொண்டு வந்த தீர்மானத்தையும், அவரது பேச்சு ஆற்றலையும் வெகுவாகப் பாராட்டி, பல கோணங்களில் கருத்துகளை எடுத்து உரைத்தார்கள்.
உறுப்பினர் திரிவேதி, மாவீரர் திலகம் பிரபாகரன் பற்றி விமர்சித்தபோது, பிரபாகரன் விடுதலைக்காகப் போராடிய மாவீரர் என்று வைகோ ஓங்கி முழங்கினார்.
விவாதம் நிறைவு பெறவில்லை. டிசம்பர் பதின்மூன்றாம் நாள் இந்த விவாதம் தொடரும்.
அதன்பிறகு வைகோ அவர்கள் நிறைவுரை விளக்கம் அளிப்பார்கள்.

No comments:

Post a Comment