Thursday, July 15, 2021

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் வைகோ மாலை அணிவித்து மரியாதை!

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை - கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை கிழக்கு சு.ஜீவன், வடசென்னை மேற்கு டி.சி.இராசேந்திரன், செங்கல்பட்டு வடக்கு மா.வை.மகேந்திரன், தென்சென்னை மேற்கு வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி, செங்கல்பட்டு கிழக்கு ஊனை ஆர்.இ.பார்த்திபன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment