Thursday, July 15, 2021

என்.சங்கரய்யா நூறாவது ஆண்டு பிறந்தநாள். வைகோ MP நேரில் வாழ்த்து!

இன்று 15.07.2021 காலை 9 மணி அளவில், குரோம்பேட்டையில் உள்ள தோழர் என்.சங்கரய்யா அவர்கள் இல்லத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், கழக நிர்வாகிகளும் சென்று தோழர் சங்கரய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளும் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் இல்லத்தினரும் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை கனிவுடன் வரவேற்றார்கள்.

நூற்றாண்டு பிறந்தநாள் விழா காணும் பொதுஉடைமைப் புரட்சியாளர் என்.சங்கரய்யா அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பட்டாடை அணிவித்தும், மல்லிகை மலர் மாலை அணிவித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்களுடனும், அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளுடனும் உரையாடிவிட்டு பொதுச்செயலாளர் அவர்கள் அங்கிருந்து விடை பெற்றார்.

கழகப் பொதுச்செயலாளர் அவர்களுடன் ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், வடசென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.சி.இராசேந்திரன், தென்சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சைதை ப.சுப்பிரமணி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மா.வை.மகேந்திரன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஊனை ஆர்.இ.பார்த்திபன் ஆகியோரும், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக, பகுதிக் கழக நிர்வாகிகளும், அணிகளின் பொறுப்பாளர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
15.07.2021

No comments:

Post a Comment