Saturday, September 17, 2022

சமுக நீதி நாள். தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு!

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்தநாள் விழா இன்று 17.09.2022 காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகம் தாயகத்தில் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மறுமலர்ச்சி திமுக கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமைக் கழகம் தாயகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து தலைவர் வைகோ அவர்களின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment