Friday, September 16, 2022

குவைத் நாட்டில் ஆர்.முத்துக்குமரன் படுகொலை! குவைத் நாட்டிற்கான இந்தியத் தூதர் வைகோவிற்கு கடிதம்!

குவைத் நாட்டில் இறந்த ஆர்.முத்துக்குமரன் அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், இறப்பிற்கு உரிய நீதி விசாரணை செய்யவும் தலைவர் வைகோ அவர்களின் கோரிக்கை..! 


திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், லட்சுமாங்குடி கிராமத்தை சேர்ந்த ஆர்.முத்துக்குமரன் என்பவர் தனது பிழைப்புக்காக, 03.09.2022 அன்று, குவைத் நாட்டிற்கு சென்று உள்ளார். ஆர்.முத்துக்குமரன் அவர்களுக்கு விசா அனுப்பி வைத்த குவைத் நாட்டைச் சேர்ந்தவர் 07.09.2022 அன்று, அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உள்ளார்.


இந்தத் தகவல் 09.09.2022 அன்று, பிற்பகல் 4 மணியளவில், அவரது மனைவி மு.வித்யா அவர்களுக்கு தெரிந்ததோடு, அந்தத் தகவல் உண்மை எனவும் உறுதி செய்யப்பட்டது.


ஆர்.முத்துக்குமரன் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்வது இதுவே முதன்முறை ஆகும். எந்த முன்பகையும் இல்லாத சூழலில், தனது கணவரை கொலை செய்த நபருக்கு உரிய தண்டனை வாங்கித் தரவும், தனது குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தரவும், தனது கணவரின் சடலத்தை தமிழகத்திற்கு கொண்டு வரவும் உதவிடுமாறு, திருமதி மு.வித்யா அவர்கள் 10.09.2022 அன்று தலைவர் வைகோ அவர்களுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதினார். 


தகவல் அறிந்த தலைவர் வைகோ அவர்கள் இது தொடர்பாக, 14.09.2022  இந்திய வெளியுறவுத்துறைக்கும், குவைத் தூதரக அதிகாரிகளுக்கும் நிலமையை விளக்கி அவசர மின்னஞ்சல் கடிதம் அனுப்பினார். 


தலைவர் வைகோ எம்.பி., அவர்களின் கோரிக்கையை ஏற்று, பதில் அளித்த குவைத் நாட்டிற்கான இந்தியத் தூதர் அவர்கள், இந்த வழக்கில் நியாயமான விசாரணையை மேற்கொள்ள குவைத் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அணுகியுள்ளோம் எனவும், தனிப்பட்ட முறையில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளோம் எனவும், இறந்தவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும், மறைந்த முத்துக்குமரன் அவர்களின் உடல்  15.09.2022 அன்று மதியம் 02.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வந்து அடையும் எனவும் தெரிவித்து இருந்தார்கள்.


தனது மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சென்ற ஆர்.முத்துக்குமரன் அவர்களின் குடும்பத்திற்கு, உரிய நீதி கிடைக்கவும், இழப்பீடும் வழங்வும், அதற்கு உரிய விசாரணையை மேற்கொள்ளவும் தலைவர் வைகோ அவர்கள் விடுத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு, முதற் கட்ட விசாரணை  துவங்கப்பட்டு உள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்,

துரை வைகோ

தலைமைக் கழகச் செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.,

16.09.2022

No comments:

Post a Comment