Thursday, September 1, 2022

வாழ்க மாமன்னர் பூலித்தேவர் புகழ்! வைகோ அறிக்கை!

ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவிலேயே முதன் முதலில் வீர வாளை உயர்த்தி, மூன்று போர்க்களங்களில் வெள்ளையரை தோற்கடித்து வெற்றிக் கொடி ஏற்றியவர் நெற்கட்டும்செவல் மாமன்னர் மாவீரர் பூலித்தேவர் ஆவார்.

தமிழ்நாட்டிலேயே முதல் முலில் கழுகுமலைக்கு அருகில் அருக்கு 1990 ஆம் ஆண்டு சிலையும், மண்டபமும் எழுப்பியது அடியேனும், என் தம்பி இரவிச்சந்திரனும் தான்.

மாவீரர் பூலித்தேவரின் வீரத்திற்கு நிகர் எவரும் இல்லை. சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நுழைந்த பூலித்தேவர் அப்படியே மறைந்துவிட்டார். அவரது தியாகமும், வீரமும் வணக்கத்திற்கு உரிவை.

வாழ்க மாமன்னர் பூலித்தேவர் புகழ்!

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
01.09.2022

No comments:

Post a Comment