Wednesday, September 21, 2022

பேரதிர்ச்சி. அண்ணன் முராத் புகாரி மறைவுக்கு ஒமான் மதிமுக ஆழ்ந்த இரங்கல்!

தென் மாவட்ட கழக செயலாளர்கள் பிரிந்து சென்ற பிறகு எழுச்சியாக அடுத்த கூட்டம் தாயகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.


வேகமாக கூட்டபட்ட கூட்டம். போதிய நேரமின்மையிலும் மதியம் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து கொண்டு வந்தார். அதற்கு நன்றி தெரிவிக்க அண்ணன் Muradbuhari அவர்களுக்கு அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டுமென்று அழைத்தேன்.

இவ்வளவு பேருக்கு வேகமாக உணவு தயாரித்து கொடுத்திருக்கிறீர்களே அண்ணே எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை என்று சொன்னேன். அதற்கு அவரது பதில் என்னெவென்றால் தலைவர் சொன்னால் செய்து முடிப்பதுதான் தம்பி என் கடமை என்று முடித்துவிட்டார்.

பின்னர் பரஸ்பரம் குடும்பம் பற்றி உரையாடி விடைபெற்றேன்.

அடுத்து அவரது தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறினேன். அண்ணன் பேசும்போதெல்லாம் அன்பை பொழிந்தார். ஒமான் கழக நிகழ்வை பற்றி கேட்டு தெரிந்துகொள்வார்.

அண்ணன் முராத் முகாரி அவர்களுக்கு இது போன்ற எண்ணற்ற அன்பு தம்பிகள் இருப்பார்கள்.

உயிரற்ற உங்கள் உடல் உயிருள்ளது போலவே இருக்குணே...

இயற்கையை பரிசோதித்து விட்டு எழுந்து வாருங்கள் அண்ணே...

தலைவர் துடி துடித்து மாமா என்று கதறி அழைக்கிறார்.

நீங்கள் இல்லாதது பேரிழப்பு அண்ணே...

எத்தனை பேருக்கு பசியாற்றிருப்பீர்கள். அவர்களெல்லாம் எப்படி கலங்கி தவிக்கிறார்கள் என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதைக்கிறது.

இயற்கையோடு கலந்துவிட்டீர்கள்.

இளைப்பாறுங்கள்.

ஒமான் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல்.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
21-09-2022

No comments:

Post a Comment