Monday, November 21, 2016

ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா-நளினி சந்திப்பும் நூலை வெளியிடும் வைகோ!

"ராஜீவ் கொலை மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா-நளினி சந்திப்பும்" என்ற தலைப்பில் நளினி அவர்கள் எழுதி ஏகலைவன் அவர்கள் தொகுத்து இருக்கின்ற நூலை, வருகின்ற 24.11.2016 வியாழக்கிழமை மாலை 4.30 மணி அளவில், சென்னை வடபழநி ஆர்கேவி ஸ்டுடியோ அரங்கில் (விஜயா கார்டன் உள்புறம்) மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெளியிடுகிறார்.

அந்த நூலை நளினியின் தாயார் பத்மாவதி அவர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள். திருமாவளவன், சீமான், திருச்சி வேலுச்சாமி, வேல்முருகன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், வழக்கறிஞர் புகழேந்தி, மூத்த வழக்குரைஞர் எஸ்.துரைசாமி, தடா சந்திரசேகர், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்கேற்கின்றார்கள். கழக கண்மணிகள் அனைவரும் கலந்துகொள்ளுங்கள் வாய்ப்புள்ளவர்கள். பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு ராஜீவ் கொலை உண்மைகளை அறிந்துகொள்ளவும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment