Tuesday, December 6, 2016

ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் வைகோ!

நேற்று 05-12-2016 இரவு 11.30 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும், தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதை தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி பவனில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று 06-12-2016 மதியம் 3 மணி அளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது துணைவியாருடன் சென்று ஜெயலலிதாவிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஜெயலலிதா செய்த நற்பணிகளை எடுத்து கூறினார்.

உடன் கழக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கழக குமார், முராத் புஹாரி மற்றும் முன்னணி மதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி மூலமாகவும் அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment