Monday, November 6, 2017

அன்னை மாரியம்மாளுக்கு தாயகத்தில் நினைவஞ்சலி!

மதுக்கடைகளை மூட சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து முன்னுதாரணமாக இருக்கவேண்டி தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அமைந்திருந்த டாஸ்மாக் மதுக்கடையை தனி ஆளாக அமர்ந்து பெண்களை திரட்டி தனது 98 ஆம் வயதிலும் அகற்ற போராட்டம் நடத்தி அகற்றினார்.

உண்ணாவிரதம் இருந்தால் தண்ணீர் கூட பருகாமல் உண்ணாவிரதம் இருந்ததால் அவருடைய உடல் நலிவற்று போராட்ட வாழ்விலே தனது இறுதி மூச்சை நிறுத்தி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அதற்கு மரியாதை நினைவஞ்சலி செய்யும் விதமாக மதிமுக நிர்வாகிகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அன்னை மாரியம்மாளுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

மதிமுக தலைமை கழகமான தாயகத்திலும் மதிமுக முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமாக அஞ்சலி செலுத்தினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment