Sunday, November 19, 2017

இனப்படுகொலையை சட்டபூர்வமாக்கும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு கருத்தரங்கில் வைகோ!

இனப்படுகொலையை சட்டபூர்வமாக்கும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு கருத்தரங்கம் நேற்று 18-11-2017 அன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மாலை 4 மணி அளவில் நடந்தது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யநாதன், தமிழீழ உணர்ச்சி கவிஞர் காசி அனந்தன், தோழர் மணியரசன், மற்றும் சில அரசியல் தலைவர்கள், தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் செய்தியாளர்களிடம், வைகோ அவர்கள் பேசிய போது தமிழீழ பொதுவாக்கெடுப்பு வட்டகோட்டையில் நடந்ததி விளக்கி கூறினார்கள்.

தொடர்ந்து சிறப்புரையிலும், இனஅழிப்பை விளக்கி இனப்படுகொலையை சட்டபூர்வமாக்கும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு பற்றியும் தெளிவாக பேசினார். 

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment