Saturday, November 4, 2017

மழை பாதிப்பில் இறந்த குழந்தைகள் குடும்பத்திற்கு ஆறுதலும், மழை பாதிப்பையும் பாவையிட்ட வைகோ!

சென்னை மழை வெள்ளம் பாதிப்பால் பல குடும்பங்கள் பாதிப்படைந்தன. சாலைகள், வீடுகளில் வெள்ள சூழ்ந்துள்ளதால், மக்கள் அன்றாடம் வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் உள்ளனர். 

மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சாக்கடை கழிவுகள் கலந்து துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவ வாய்ப்புள்ளது. இதையறிந்த வைகோ அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அரசுக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

மழை பாதிப்பால் மின்சாரம் தாக்கி இறந்த சிறுமிகள் குடும்பத்திற்கு நேரில் சென்று அனுதாபங்களை தெரிவித்தார். 

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment