Friday, November 24, 2017

குழந்தை மனமறிந்து குழந்தையாக மாறிய கொள்கை வேழம் தலைவர் வைகோ!


இன்று(24.11.2017) மாலை 6:00 மணியளவில் அண்ணாநகர் இல்லத்திற்கு சென்னையை சேர்ந்த பேராசிரியர் விஜயராகவன் ( நமது இயக்கத்தை சாராதவர்; தலைவர் மீது பற்றுக் கொண்டவர். தனது அறுபதாமாண்டு விழா அழைப்பிதழை தலைவர் வைகோ அவர்களுக்கு வழங்க குடும்ப சகிதம் வருகைப் புரிந்தார்கள். அனைவரும் வரவேற்பு அறையில் அமர்ந்து இருந்தனர்.

பேராசிரியர் அவர்களுடன் தம்பி லியோன் (சற்றே மாற்று திறனாளி)அவர்களை அழைத்து வந்திருந்தார்கள். 


தலைவரைப் பற்றி பேராசிரியரிடம் கேட்கும் போதெல்லாம் கறுப்பு துண்டை நினைவு வைத்தே கேட்பாராம், லியோன்.



தம்பி லியோன் தலைவர் இல்லத்திற்கு வந்த நேரம் முதல் சற்று பரபரப்பாக காணப்பாட்டார். காரணம் தலைவரை வைகோவை நேரில் சந்திக்கப் போகும் குதூகலம் தான்.


தலைவர் வைகோ அவர்கள் அவர்கள் அனைவரையும் உள்ள அழைத்து வர விழித்ததும், உள்ளே நுழைந்த தம்பி லியோன் முகம் வெரித்து சோகம் கப்பிக் காணப்பட்டது. அவன் மனதுக்குள் நினைத்த வைகோ (கருப்பு துண்டு அணிந்த) அங்கே இல்லை. மாறாக முழுக்கைச் சட்டை; முழுக்கால் சைட்டையுடன் இருந்ததே லியோனின் சோகத்திற்கு காரணம். தலைவர் வைகோ அவர்கள் லியோனை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்த போதும் அவனது வருத்தம் குறையவில்லை. கருப்புத் துண்டு எங்கே என்றும் கேட்டுவிட்டான் லியோன். பேண்ட் சர்ட்டில் கருப்பு துண்டு அணிய மாட்டார் என்று பேராசிரியர் சொல்லியும் அவன் சமாதானம் ஆகவில்லை. இருக்கமாகவே இருந்தான்.

இதனை உணர்ந்த தலைவர், ஒரு நிமிடங்கள் இங்கேயே இருங்கள். சின்ன வேலை இருக்கு முடித்து வருகிறேன் என்று இரண்டாவது தளத்தில் உள்ள தனது அறைக்கு சென்று, கம்பீரத் தோற்றமான வேட்டை, சிப்பா சட்டையில் கருப்பு துண்டு அணிந்து கொண்டு சற்று நேரத்தில் தலைவர் அந்த அறையில் நுழைந்த மாத்திரத்தில் லியோன் முகம் ஆயிரம் நிலவு ஒன்று கூடியது போன்ற பிரகாசத்தில் மிளிரியது. தலைவரோடு சேர்ந்து புகைப்படம் எடுக்கும் போது எத்தனை எத்தனை ஆனந்தம் அவனது முகத்தில்.

தந்தை பெரியார் அவர்களை சந்திக்க சிறார்கள் வந்தாலும், தள்ளாத வயதிலும் எழுந்து வணக்கம் சொல்லுவார் என கேட்டும், படித்தும் அறிந்திருக்கிறோம். 


ஆம் பெரியார் இன்னும் மரணிக்கவில்லை இம்மண்ணில். தலைவர் வைகோ அவர்கள் உருவில் இருக்கிறார் நம்மோடு.



குழந்தை மனமறிந்து குழந்தையாக மாறிய கொள்கை வேழமன்றோ தலைவர் வைகோ.


தகவல்: சேது.முத்தையா மறுகால்குறிச்சி

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment