Thursday, June 28, 2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது! வைகோவுக்கு தமிழக அரசு கடிதம்!

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் புகார் அளித்திருந்தார். ( Petition No.MOEAF/P/2018/00216 dt. 02.05.2018) இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டச் சுற்றுப்புறச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை, மறுமலர்ச்சி திராவிட முனனேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு அனுப்பியுள்ளார். (Letter No.DEE/TTN/F-Comp..2439/1-Petition/dated 15.06.2018).


அக்கடித விவரம் வருமாறு :

ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தினர், தங்களது உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரி அளித்து இருந்த விண்ணப்பத்தைத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், 9.4.2018 அன்று ஏற்க மறுத்ததுடன், ஆலையை இயக்கக்கூடாது என, 12.04.2018 அன்று ஆணை பிறப்பித்தது. அதைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளையும், மின் இணைப்பைத் துண்டித்தும், 23.05.2018 அன்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, 24.05.2018 அன்று, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதன்படி, 28.05.2018 அன்று ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

என்று தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவலை, மதிமுக தலைமை கழகம் தாயகம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment