Sunday, August 25, 2019

பேரறிஞர் அண்ணா - பெருந்தலைவர் காமராஜர் பெயர் பலகை அகற்றம் சென்னை விமான நிலைய முற்றுகை-மதிமுகவினர் கைது!

பேரறிஞர் அண்ணா பன்னாட்டு - பெருந்தலைவர் காமராஜர் உள்நாட்டு விமான நிலைய பெயர் பலகை அகற்றிய மத்திய அரசையும், தடுக்க தவறிய மாநில அரசையும் கண்டித்து, இன்று 25-08-2019 காலை 10:30 மணி அளவில் மறுமலர்ச்சி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திரிசூலம் இரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற போது, மதிமுகவினரை காவல்துறையினர் தடுத்து கைது செய்து. மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈசுவரன், ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.இராசேந்திரன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, மா.வை.மகேந்திரன், ஊனை பார்த்திபன், தேர்தல் பணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளர் முராத் புகாரி, தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் ஆயிரக் கணக்கில் கலந்துகொண்டு கைதாகினர்.

No comments:

Post a Comment