Monday, April 27, 2020

இறந்த உடல்களை இந்தியா கொண்டு வர வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுடன் வைகோ அலைபேசி உரையாடல்!

கடந்த மார்ச் 17ஆம் நாள் துபாயில் மாரடைப்பால் இயற்கை எய்திய, விருதுநகர் மாவட்டம்- மகராஜபுரம் துரைராஜ் உடலை இந்தியா கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தடை குறித்து மறுமலர்ச்சி தி.மு. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோருடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அதன் பிறகு அமைச்சர் ஜெய்சங்கர் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை இரண்டு முறை தொடர்பு கொண்டு பேசினார். துரைராஜ் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மே ஒன்றாம் நாள் அவர் உடல் வந்து சேரும் என உறுதி அளித்து இருக்கின்றார்.
அதே போல அபுதாபியில் இருந்து தில்லிக்கு வந்து, திருப்பி அனுப்பப்பட்ட மூன்று உடல்களையும் இந்தியா கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இத்தகைய தடைகளை நீக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், அமைச்சர் அவர்கள் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டதற்கு வைகோ நன்றி தெரிவித்துக்கொண்டார் என்ற செய்தியை மதிமுக தலைமை நிலையம் தாயகம் 27-04-2020 வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment