Saturday, April 4, 2020

மதிமுக மாணவர் அணி சார்பில் நிவாரணம்!

கொரோனா நுண்ணுயிர் தொற்றுக்கு எதிராக, அதஞ்சை மாவட்ட மதிமுக மாணவர் அணி சார்பில், வண்ணாரப்பேட்டை ஊராட்சி 6 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், பொதுமக்கள் கொரோனா நுண்ணுயிர் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் கபசூர மூலிகை பொடி, நிலவேம்பு மூலிகை போடி, கிருமிநாசினி சோப்பு ஆகியவை தலா நூறு குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
மறுமலர்ச்சி திமுக., ஆபத்து காலங்களில், செஞ்சிலுவை சங்கம் போல செயல்படும் என தலைவர் வைகோ அவர்கள் தொடர்ந்து கூறி வருவதை மெய்ப்பிக்கிற வகையில்,
தஞ்சை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளரும், வண்ணாரப்பேட்டை ஊராட்சி 6 வது வார்டு உறுப்பினருமான நண்பர் மணிகண்டன் அவர்கள் தனது சொந்த முயற்சியில் மேற்கண்ட பொருட்களை வழங்கி இருக்கிறார்.
தலைவர் வைகோ அவர்களுக்கும், கழகத்திற்கும் பெருமை சேர்க்கிற வகையில் தமிழகம் முழுவதும் இருக்கின்ற மாணவர் அணி நிர்வாகிகள் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தலைவரின் விருப்பத்திற்கு இணங்க,
கொரோனா நுண்ணுயிர் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட நம்மால் ஆன பணிகளை தொடர்ந்து செய்வோம். பொதுமக்களுக்கு மதிமுக உதவிகரமாக இருந்து வருகிறது என்கிற செய்தி நாடு முழுவதும் பரவட்டும்.
தஞ்சை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் நண்பர் மணிகண்டன் அவர்களுக்கு கழக மாணவர் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மணிகண்டன் அலைபேசி எண்: 7810092922
அன்புடன்,
பால.சசிகுமார்
மாநில மாணவர் அணிச் செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக.,

No comments:

Post a Comment