Thursday, April 9, 2020

கழக மாணவர் அணி நிர்வாகிகளை அலைபேசியில் அழைத்து பாராட்டிய அண்ணன் துரை வைகோ அவர்கள்!

கோவிட் - 19 கொரோனா நுண்ணுயிர் கிருமி தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்துவரும் நிலையில்..
10.04.2020 தேதியிட்ட, கழக வார ஏடான சங்கொலியில் கொரோனா ஆபத்து குறித்து மிக விரிவாக, மருத்துவ ஆய்வு கட்டுரையை போல ஒரு கடிதத்தை கழக கண்மணிகளுக்கு தலைவர் வைகோ அவர்கள் எழுதி இருந்தார்கள்.
அந்த கடிதத்தில்,
மறுமலர்ச்சி திமுக ஆபத்து காலங்களில் செஞ்சிலுவை சங்கம் போல செயல்படும் என்று நான் ஆடிக்கடி கூறி வருவதை மெய்ப்பிக்கும் வகையில், கழகத் தோழர்கள் ஆங்காங்கே பொதுமக்களுக்கு உதவி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது; இது போன்ற காலகட்டங்களில் கழகத் தோழர்கள் பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் உதவிட முன்வர வேண்டும் என தலைவர் வைகோ அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.
மார்ச் 21 ஆம் தேதி, மதிமுகம் தொலைக்காட்சியில் காணொளியின் வாயிலாக, தலைவர் வைகோ அவர்களின் புதல்வர்.. நம் வருங்கால நம்பிக்கை அண்ணன் துரை வைகோ அவர்கள் கொரோனா நுண்ணுயிர் கிருமி ஆபத்து குறித்தும், நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், நம்மை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மிக விரிவாக பேசி பல லட்சம் பேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதனால் ஏற்பட்ட தாக்கத்தினாலும், ஊக்கத்தினாலும் கழகத் தோழர்கள் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகின்றார்கள்.
கழக மாணவர் அணி நிர்வாகிகளும், தொடர்ந்து மக்களுக்கு உதவுகின்ற வகையில் சேவையாற்றி வருகிறார்கள்.
மாணவர் அணி நிர்வாகிகளின் களப்பணிகளை சமூக வலைதளங்களின் வாயிலாக அறிந்து கொண்ட அண்ணன் துரை வைகோ அவர்கள், மாணவர் அணி தோழர்களை அலைபேசியில் அழைத்து பாராட்டினார்.
மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் அண்ணன் திருப்பூர் சு.கோவிந்தராஜன்,
திருவள்ளூர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஆங்காடு சி.சங்கர்,
கரூர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் குளித்தலை பூமிநாதன்,
தஞ்சை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன்,
மாணவர் அணி தம்பி ஆரணி தனசேகரன்..
ஆகியோரை இன்று மாலை அலைபேசியில் அழைத்து அண்ணன் துரை வைகோ அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
உங்களின் பணிகள் அனைத்தையும் கவனித்தேன்.. உங்களால் இயக்கத்திற்கும், தலைவருக்கும் பெருமை என வாழ்த்தினார்.
மக்களுக்கு உதவிகரமாக இருந்து வருகிற நீங்களும் மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டும் என தாயின் பரிவுடன் அறிவுரை கூறினார்.
உங்கள் பகுதியில் கொரோனா பாதிப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதையும் கவனமாக கேட்டு தெரிந்து கொண்டார்.
தம்பி ஆரணி தனசேகரனிடம் பேசும் போது, உங்களால் முடிந்த பணிகளை மட்டும் இயக்கத்திற்கு செய்யுங்கள்.. அந்த பணிகள் உங்கள் சக்திக்கு மீறியதாக இருக்க கூடாது.. உங்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன் என.. தன் ஆறுதல் வார்த்தைகளால் அணைத்துக் கொண்டார்.
தஞ்சை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், தன்னுடைய பகுதியில் தான் மிகுந்த வாக்குகள் வித்தியாசத்தில் வார்டு உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்ட செய்தியை அண்ணன் துரை வைகோ அவர்களிடம் தெரிவித்த போது, 'உங்கள் பணிகளை பார்த்து தான் மக்கள் உங்களை தேர்வு செய்து இருக்கிறார்கள்.. அவர்களுக்கு வழிகாட்டுகிற விதத்தில் பணி ஆற்றுங்கள்' என வாழ்த்து தெரிவித்தார்.
அண்ணன் திருப்பூர் சு.கோவிந்தராஜன் அவர்களிடம் பேசும் போது, மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தி அவரின் பணிகளை பாராட்டினார்.
குளித்தலை பூமிநாதனிடம் பேசும் போது, குளித்தலையில் கொரோனா பாதிப்பு கள நிலவரங்களை கவனமுடன் கேட்டுக் கொண்ட அண்ணன் துரை வைகோ அவர்கள் ... நீங்கள் களத்தில் இருக்கிறீர்கள்.. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறினார். அவரின் பணிகளை பாராட்டினார்.
அண்ணன் ஆங்காடு சங்கரிடம் பேசும் போது, உங்கள் பணிகளை பார்த்தேன்.. மக்களுக்கு உதவியாக இருக்கிறீர்கள் என பாராட்டினார். அண்ணன் சங்கர் அவர்கள் தெரிவித்த சிறிய கோரிக்கையை, தலைவரின் கவனத்திற்கு அவசியம் கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
கழக மாணவர் அணி நிர்வாகிகளின் பணிகளை அண்ணன் துரை வைகோ அவர்கள் பாராட்டியது மிகுந்த நெகிழ்ச்சி அளிக்கிறது.
அண்ணன் துரை வைகோ அவர்களின் பாராட்டை பெற்ற, மாணவர் அணி நிர்வாகிகளின் மகிழ்ச்சியான மனநிலையை வார்த்தைகளால் வெளிப்படுத்தி விட முடியாது. நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு மகிழ்ந்தார்கள்.
அண்ணனின் பாராட்டு, மற்ற கழகத் தோழர்களுக்கும் ஊக்கமாக இருக்கும்.
குறிப்பாக, மாணவர் அணியினர் வரும் நாட்களில் களத்தில் இன்னும் உற்சாகத்துடன் பணி ஆற்றுவார்கள்.
தாயின் உள்ளன்போடு பாராட்டி, மாணவர் அணி நிர்வாகிகளை ஊக்கப்படுத்திய அண்ணன் துரை வைகோ அவர்களுக்கு கழக மாணவர் அணி சார்பில் நெகிழ்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
பால.சசிகுமார்
மாநில மாணவர் அணிச் செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக.,

No comments:

Post a Comment