Saturday, May 2, 2020

வைகோ கோரிக்கையை ஏற்றது, இராஜஸ்தான் அரசு!

இராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் தங்கி ஐஐடி நுழைவுத்தேர்வு, ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு மற்றும் தேசிய தகுதிகாண் தேர்வு (நீட்)க்கு மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த ஒரு மாதமாக ஊர் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர்.
சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 55 மாணவர்கள், அவர்களுடைய 23 பெற்றோர்கள், தமிழகம் திரும்ப உதவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இது தொடர்பாக, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கோட்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் இதற்காகப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள இராஜஸ்தான் மாநில அரசு அதிகாரி திரு சரவணகுமார் ஆகியோருடன் பேசி வேண்டுகோள் விடுத்தார்.
மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலஅரசுகள் பேருந்துகளை அனுப்பி, தங்கள் மாணவர்களை அழைத்துக்கொண்டு சென்றதாகத் தெரிவித்தனர். வைகோ வேண்டுகோளை ஏற்று, இராஜஸ்தான் மாநில அரசே பேருந்து ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள் விரைவில் தமிழகம் திரும்புகின்றார்கள் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் 02-05-2020 தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment