Friday, May 1, 2020

தாயகத்தில் மே தின விழா!

இன்று 01-05-2020 தாயகத்தில், இந்திய மே தின வரலாற்றில் வி.பி.சிங் அவர்களின் ஆட்சி காலத்தில், ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெற்று தந்த தலைவர் வைகோ எம்பி அவர்கள் தலைமையில் இயங்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சார்பில் அதன் மாநில தலைவர் ஆவடி அந்திரிதாஸ் அவர்கள், மாநில துணை தலைவர் சு.ஜீவன், மாநில செயலாளரும், எம்.எல்.எப் செயலாளருமான க.ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி கொடியேற்றினார். 

இந்நிகழ்வில் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கே.கழககுமார், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சைதை.ப.சுப்பிரமணி, தென் சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் துரை.குணசேகர், வட சென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் அப்பன்துரை, எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார், வேளச்சேரி பகுதி செயலாளர் சு.செல்வப்பாண்டியன், அண்ணாநகர் பகுதி செயலாளர் இராம.அழகேசன், வெளியீட்டு அணி துணைச் செயலாளர் விக்டர் எபிநேசர், மாணவர் அணி துணை செயலாளர் முகவை இரா.சங்கர், தென்சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.எஸ்.ஹரி, சித்திரை பாண்டியன், வட சென்னை கிழக்கு மாவட்ட தொண்டர் அணி ஜானகிராமன், ரிலுவான் கான் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment