Saturday, October 3, 2020

மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடலூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் திரு. ஜெ. இராமலிங்கம் அவர்கள் தனது உடல்நிலை காரணமாக தொடர்ந்து மாவட்டப் பொறுப்பில் இயங்க இயலாத நிலையில் உள்ளதாகக் கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கோரிக்கையினை ஏற்று, அவர் கடலூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக (முகவரி : எண். 119-சி, மெயின் ரோடு, நெல்லிக்குப்பம் - 607 105, கடலூர் மாவட்டம்; கைப்பேசி எண். 94437 - 90601) நியமிக்கப்படுகிறார்.

கடலூர் கிழக்கு - கடலூர் மேற்கு மாவட்டங்களில் உள்ளடக்கிய சட்டமன்றத்  தொகுதிகள் மாற்றம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ளடக்கிய சட்டமன்றத் தொகுதிகள் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகியவை ஆகும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கடலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக திரு. என். இராமலிங்கம் அவர்கள் தொடர்ந்து கழகப் பணியாற்றுவார்.
கடலூர் வடக்கு மாவட்டம், கடலூர் மேற்கு மாவட்டமாக மாற்றப்படுகிறது.
கடலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ளடக்கிய சட்டமன்றத் தொகுதிகள் நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகியவை ஆகும். கடலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக திரு. எம். பிச்சை அவர்கள் (முகவரி : எண். 6/344, கடலூர் மெயின் ரோடு, நெய்வேலி - 607 802, கடலூர் மாவட்டம்; கைப்பேசி எண். 94433 - 62431) கழகப் பணியாற்றுவார்.
கடலூர் தெற்கு மாவட்டக் கழகம் ஏற்கனவே அறிவித்தபடி இயங்கும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
‘தாயகம்’
சென்னை - 8
03.10.2020

No comments:

Post a Comment