Wednesday, October 21, 2020

தலைமைக் கழக செய்திக் குறிப்பு!

கோவில்பட்டி சிந்தலக்கரையைச் சேர்ந்த சுரேஷ் (த/பெ வேலப்பன்) சிங்கப்பூரில் இயற்கை எய்தினார். அவரது உடலை விரைவில் இந்தியா கொண்டு வந்து சேர்க்கக் கோரி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்திய அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மின் அஞ்சல் எழுதியதுடன், அமைச்சரின் செயலகத்தைத் தொடர்பு கொண்டு பேசினார்.

இன்று அமைச்சம் அனுப்பி உள்ள விளக்க மின் அஞ்சலில், சுரேஷ் உடல் தற்போது சிங்கப்பூர் மருத்துவமனையில் இருக்கின்றது; சிங்கப்பூரில் உள்ள அவரது உறவினர்களுடன் தொடர்புகொண்டு பேசினோம்; சுரேஷ் வேலை பார்த்து வந்த நிறுவனத்திடம் அவரது உடல் நாளை (21.10.2020) அளிக்கப்படும்; அதன்பிறகு, இந்தியா கொண்டு வருவதற்கான தடை இல்லாச் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவித்து உள்ளனர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
20.10.2020

No comments:

Post a Comment