Saturday, December 19, 2020

பேராசிரியர் க.அன்பழகன் பிறந்தநாளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர் தூவி மரியாதை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 19-12-2020 சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருஉருவப்படத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டக் கழகச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.இராசேந்திரன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment