Thursday, December 31, 2020

வைகோ எம்பி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து!

ஆதி அந்தம் இல்லாத கால வெள்ளத்தில் எழுந்து விழும் அலைகளுள் ஒன்றாக எழுகிறது 2021 ஆம் ஆண்டு.

மத்தியில் ஆளுகின்ற நரேந்திர மோடி அரசு, அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை ஏற்படுத்தி, நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சிதைத்து, ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே வரி; ஒரே குடும்ப அட்டை; ஒரே வேளாண் மண்டலம் என்று எதேச்சதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கின்றது.
உழவர் பெருங்குடி மக்களுக்குப் பெரும் துரோகம் செய்து, வேளாண் சட்டங்கள் எனும் மூன்று நாசகாரச் சட்டங்களைக் கொண்டு வந்து கோடிக்கணக்கான விவசாயிகள் வாட்டி வதைக்கும், பனியிலும், குளிரிலும் தங்களை வருத்திக் கொண்டு போராடுகிற நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.
தமிழகத்தை கடந்த பத்தாண்டு காலமாக வரலாறு காணாத ஊழல் கொள்ளையின் மூலம் அண்ணா தி.மு.க. அரசு நாசம் செய்து வருகிறது. தமிழகத்திற்கு விடியலை ஏற்படுத்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. ஊழல் ஆட்சி அகற்றப்படவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமையவும் உறுதி எடுத்துக்கொண்டு தமிழக மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
31.12.2020

No comments:

Post a Comment