Sunday, December 6, 2020

அம்பேத்கர் நினைவு நாளில் வைகோ எம்பி மலர் மரியாதை!

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, இன்று 6-12-2020 காலை சென்னை கோயம்பேடு எதிரில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டக் கழகச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.இராஜேந்திரன், சைதை ப.சுப்பிரமணி, கே.கழககுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment