Friday, December 11, 2020

மதிமுக தலைமைக் கழகச் செய்திக் குறிப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் மலைரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அபிர்ஜான் கடந்த 14.10.2020 அன்று சவுதி அரேபியாவில் இறந்து போனார்.

அவரது உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு நிறைய ஆவணங்களை ஆயத்தம் செய்ய வேண்டி இருந்தது. மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வளைகுடாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள மதிமுக தோழர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.
அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சவுதியில் உள்ள இந்தியத் தூதருக்கும், வைகோ அவர்கள் மின்அஞ்சல் எழுதி இருந்தார்கள்.
அனைத்துப் பணிகளும் முடிக்க தாமதம் ஏற்பட்டு 56 நாட்களுக்குப் பிறகு 10.12.2020 சனிக்கிழமை காலை அபிர்ஜான் உடல் சென்னை வந்து சேர்ந்தது. நேற்று இரவு 8:00 மணிக்கு குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ரெட் கிராஸ் ஆம்புலன்ஸ் மூலம் அந்த அந்த குடும்பத்தினர் தற்போது வசிக்கின்ற திருச்சிக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.
கேட்பாரற்றுக் கிடந்த உடலை மீட்டு தாயகம் வரக் காரணமாக இருந்த, வைகோ அவர்களுக்கு, அந்தக் குடும்பத்தினர் நன்றி கூறினர்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
11.12.2020

No comments:

Post a Comment