Saturday, April 2, 2022

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மாநில உரிமை மீட்புப் பயணம் - இந்தியாவுக்கே வழிகாட்டும்! வைகோ எம்பி வாழ்த்து!

தமிழகத்தில் விழிப்புணர்வை உருவாக்க உள்ள இந்த இலட்சியப் பயணம், அனைத்திந்திய அளவிலும் ஓர் தாக்கத்தை உருவாக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை!
நீட் தேர்வுக்கு, 20க்கும் மேற்பட்ட இளம் தளிர்களை நாம் பலி தந்துவிட்டோம். இதன் பாதிப்பில் நம் இளைஞர்கள் இன்னமும் கண்ணீர் சிந்திடும் அவலம் தொடர்கிறது. இதற்குத் தீர்வு காண வேண்டிய மாநில அரசின் அதிகாரங்கள் ஒவ்வொன்றையும், ஒன்றிய அரசு திட்டமிட்டு கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் நம் இலட்சிய முழக்கம் நடைமுறையில் இல்லவே இல்லை!
இவைகளுக்கெல்லாம் தீர்வுகாண மக்களைத் தயார்படுத்தும் இந்தப் பிரச்சாரப் பயணம் முழுமையான வெற்றி பெறட்டும். தமிழர் தலைவர் ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கும், அவருடன் பயணம் மேற்கொள்ள உள்ள தோழர்களுக்கும் நம் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
02.04.2022

No comments:

Post a Comment