Tuesday, April 5, 2022

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து தலைவர் வைகோ அவர்களின் அறிவிப்புக்கு இணங்க, 04.04.2022 நேற்று மாலை 5 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன்.

ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மறுமலர்ச்சி தி.மு.க.வின் அழுத்தமான எதிர்ப்புக் குரலை பதிவு செய்தேன்.

அரசியலுக்கு வந்தபிறகு, நான் அதிகாரப்பூர்வமாக பங்கேற்கும் முதல் போராட்டம் இது..!

துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் ப. சுப்பிரமணி (மாமன்ற உறுப்பினர்), சு. ஜீவன் (மாமன்ற உறுப்பினர்), கே. கழக குமார், டி. சி. இராசேந்திரன், இ.வளையாபதி, மாவை. மகேந்திரன், ஊனை. பார்த்திபன், டி. டி. சி. சேரன், தீர்மான குழு செயலாளர் கவிஞர் மணி வேந்தன், தேர்தல் பணி செயலாளர் ஆவடி. இரா. அந்தரிதாஸ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பூவை மு.பாபு, கே.எம்.ஏ.குணா, உயர்நிலைக் குழு உறுப்பினர் தமிழ்வாணன் குடியரசு, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி, ஆவடி மாநகராட்சி துணை மேயர் எஸ்.சூரியகுமார், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர்கள் மல்லிகா தயாளன், ராணி செல்வின், சுப்பையா அண்ணாச்சி, திருமதி பிரசன்னா, பகுதி செயலாளர் சூளைமேடு பி.குமார், வட்டச்செயலாளர் தேவராஜ் மற்றும் ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகளும், தோழர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

அன்புடன்
துரை வைகோ
தலைமைக் கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
05.04.2022

No comments:

Post a Comment