Sunday, June 28, 2015

ஜூலை 6 இல் திருவைகுண்டம் அணையைத் தூர்வாருகிறார் வைகோ!

திருவைகுண்டம் அணையைத் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கழகப் பொதுச்செயலாளர் அறிவுறுத்தலுக்கு இணக்க மாவட்டச் செயலாளர் ஜோயல் வழக்குத் தொடர்ந்திருந்தார், இவ்வழக்கில் பசுமைத் தீர்ப்பாயம் திருவைகுண்டம அணையை துர் வாருவதற்கு மாநில அரசு அரசை வலியுறுத்தியது,

ஆனால் இதுவரை மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இன்று மதியம் திருவைகுண்டம் அணையைப் பார்வையிட்ட வைகோ அவர்கள். வந்திருந்த செய்தியாளர்களிட்ம் மண்வெட்டி கடப்பாறை, இரும்பு சாந்துச் சட்டி எடுத்து வந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளுடனும், கழகத் தொண்டர்களுடனும் நானே அணையில் இறங்கி தூர் வாரப்போகிறேன் என்றார்,

இந்நிகழ்ச்சியில் குலசேகர நையனார், துணைப்பொதுச்செயலாளர் நாசரேத் துரை, மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், ப.ஆ.சரவணன், எஸ்.பெருமாள். மாணவர் அணி மாநிலச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், இணையளதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment