Tuesday, June 30, 2015

சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தில் நாளை வாதிடுகிறார் வைகோ!

தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் திருவைகுண்டம் அணையைத் தூர் வாருவது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாளை (01.07.2015) காலை 10.30 மணிக்கு ஆஜராகி வாதிடுகிறார். 

திருவைகுண்டம் அணையை தூர்வார உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் தமிழக அரசு தூர்வாராமல் இழுத்தடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் வருகிற 6 ஆம் தியதி திங்கள் கிழமை அணையை தூர்வார அனைத்து விவசாயமக்களுக்கும் அழைப்பு விட்டிருந்த நிலையில், தமிழக அரசு நாளை தூர்வார உத்தரவு பிறப்பித்து பணியை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment