Saturday, June 20, 2015

ரமலான் நோன்பு நோற்கும் எளியோருக்கு உணவு பொருட்கள் வழங்குகிறார் வைகோ!

வருகிற 25-06-2015 வியாழன் அன்று காலை 11 மணி அளவில் எழும்பூர் இம்பீரியல் ஹோட்டல் வளாகத்திலுள்ள சிவராஜ் மகாலில் ரமலான் நோன்பு நோற்கும் ஏழை எளியோருக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கி சிறப்பிக்கிறார் மக்கள் தலைவர் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள்.

இதற்கான ஏற்பாட்டை மதிமுக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் முராத் புஹாரி அவர்கள் செய்கிறார்கள். 

இந்த புனித நிகழ்வில் தலைமை கழக, மாவட்ட, வட்ட, ஒன்றிய, பகுதி கழக, இணையதள அணி மற்றும் கழக தோழர்கள் அனைவரும் அன்போடு கலந்துகொண்டு சிறப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment