Wednesday, April 19, 2017

திருச்சி மாவட்ட மதிமுகவினர் சீமைகருவேல மரங்களை அகற்றினர்!

திருச்சி மாவட்ட மதிமுகவினர் இன்று 19.04.2017 காலை, திருச்சி கோட்டை இரயில் நிலையம் அருகில் தலைவர் வைகோ அவர்களின் உத்தரவின் பேரில் இரயில்வே துறையினரின் அனுமதியோடு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு அவர்கள் தலைமையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.

இதில் வழக்கறிஞர் வீரபாண்டியன், மருத்துவர் ரொஹையா, ராஜன் இளமுருகு, பெல்.ராஜமாணிக்கம், வெ.அடைக்கலம் ஆகியோர் முன்னிலையில், நம்கழக தோழர்கள் ஈடுபட்டு சீமை கருவேலம் மரங்களை அகற்றினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment