Tuesday, February 4, 2020

வைகோ கோரிக்கை ஏற்பு! அமைச்சர் உறுதிமொழி!

இன்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவை சுழிய நேரத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பேசும்போது, அறிவுசார் சொத்து உரிமை மேல் முறையீட்டு வாரியத்தை சென்னையிலிருந்து மாற்றக் கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.
அதன் பிறகு அவைக்கு வந்த வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், உறுப்பினர் வைகோ அவர்களுடைய கோரிக்கையைக் கேட்டேன். அறிவுசார் சொத்து உரிமை மேல் முறையீட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தை சென்னையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. தேவைப்படுகின்ற இடங்களில் மேலும் புதிய கிளைகளை அமைக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment