Sunday, February 9, 2020

கழிப்பு அறைக் கிடங்குகள், கழிவுநீர் அகற்றுதலில் மனிதர்கள் ஈடுபடுவதைத் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்விகளுக்கு அமைச்சர் விளக்கம்!

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கழிப்பு அறைக் கிடங்குகள், கழிவு நீர் அகற்றுதலில் மனிதர்கள் ஈடுபடுவதைத் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 08.02.2020 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் அளித்த பதில் வருமாறு:-
கீழ்க்காணும் கேள்விகளுக்கு சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) கடந்த மூன்று ஆண்டுகளில் கழிப்பு அறைக் கிடங்குகள் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் பணிகளின் போது இந்தியா முழுமையும், மாநில வாரியாக எத்தனை பேர் இறந்தனர்?
(ஆ) துப்புரவுப் பணிகளில் மனிதர்களுக்குப் பதிலாக, அதற்கு உரிய கருவிகளைக் கொண்டு செய்வற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
(இ) துப்புரவுக் கருவிகளை நகராட்சிகளுக்கு வழங்கும் திட்டம் ஏதும் அரசின் கவனத்தில் இருக்கின்றதா?
துணையின் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்துள்ள விளக்கம்
(அ) மாநில வாரியாக இறந்தவர்கள் பட்டியல்
மாநிலம் 2016 2017 2018 2019 (நவம்பர் வரை) மொத்தம்
ஆந்திரா 3 2 9 2 16
பீகார் 0 6 6 0 12
சதீஸ்கர் 0 0 1 0 1
சண்டிகர் 0 3 0 0 3
தில்லி 1 13 10 6 30
கோவா 2 0 0 0 2
குஜராத் 7 7 2 14 30
ஹரியானா 0 11 6 14 31
கேரளா 2 1 0 0 3
கர்நாடகா 9 4 1 3 17
மத்தியப்பிரதேசம் 2 0 0 0 2
மராட்டியம் 4 4 7 12 27
பஞ்சாப் 2 4 2 4 12
இராஜஸ்தான் 5 6 2 4 17
தமிழ்நாடு 10 7 9 14 40
திரிபுரா 2 0 0 0 2
தெலுங்கானா 0 0 2 0 2
உத்தரப்பிரதேசம் 1 8 9 9 27
மேற்கு வங்கம் 0 7 0 2 9
மொத்தம் 282

ஆ முதல் ஈ வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்
துப்புரவுத் தொழிலாளர்களுக்கான நிதி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (National Safal Karmacharis Finance and Development Corporation-NSKFDC) அனைத்து நகராட்சிகளிலும் ஒப்பந்ததாரர்களுக்கு, கழிப்பு அறைகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது குறித்த பயிற்சிகளை அளித்து வருகின்றது.
2018-19 ஆம் ஆண்டில் அவ்விதம் 458 பயிற்சி முகாம்கள் நடைபெற்றுள்ளன.
மேலும் இந்நிறுவனம், மின் துப்பரவுக் கருவிகளை வாக்குவதற்காக ஒவ்வொரு நகராட்சிக்கும் தலா 50 இலட்சம் ரூபாய் கடன் உதவி வழங்குகின்றது.
நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகிய இரு துறைகளும் இணைந்து 19.08.2019 அன்று அனைந்து இந்திய அளவில் ஒரு பயிற்சி அரங்கை நடத்தியது. அதில், கழிப்பு அறைக் கிடங்குகள் துப்புரவுப் பணியாளர்கள், நகராட்சி அதிகாரிகள், மாநில அரசுகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். அதன் ஒரு பகுதியாக புதிதாக அறிமுகம் ஆகி உள்ள துப்புரவுக் கருவிகளின் கண்காட்சியும் இடம் பெற்றது. அதேபோல, 16.12.2019 அன்று, மண்டல அளவில், ஹைதராபாத் நகரில் ஒரு பயிற்சி அரங்கம் நடத்தப்பட்டது.
துப்புரவுப் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வைகோ அவர்களின் கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment