Monday, May 15, 2017

சிறை சென்றது ஏன்? வைகோ கடிதம்-4, மக்கள் ஆட்சிக்கு மகுடமே பொது வாக்கெடுப்பு! பாகம்-4!

மாநிலங்களவையில் அண்ணா:-

அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு என் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்திய நாட்டின் இறையாண்மைக்கு, ஒற்றுமை ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் பேசுவதற்கு, பேச்சு உரிமைகளில் இடம் இல்லை. Reasonable restrictsions என்ற வரையறைக்குள் இது வந்து விடும். இதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்று திருத்தம் கொண்டு வந்தார்கள்.

இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் விவாதம் வந்தது. கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அப்போது, பேரறிஞர் அண்ணா மாநிலங்கள் அவை உறுப்பினர். 1963 ஜனவரி 25 ஆம் நாள் சபை கூடுகிறது. எந்த அன்னைத் தமிழ் மொழிக்காக, சரியாக ஓராண்டு கழித்து மலைக்கோட்டைத் திருநகராம் திருச்சிராப்பள்ளியில், கீழப்பழுவூர் சின்னச்சாமி, தணலின் நாக்குகளுக்குத் தன் உயிரைத் தாரை வார்த்துக் கொடுத்தானோ, அதே ஜனவரி 25 ஆம் நாளில்; 1963 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா மாநிலங்கள் அவையில் பேசுகிறார். அவையின் துணைத் தலைவரான சகோதரி மார்கரெட் ஆல்வா பேரவைத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து இருக்கின்றார்.

அறிவுக்கடல் அல்லவா அண்ணா? ஆகாயம் போன்ற அவரது சிந்தனை ஓட்டத்தை நான் அந்த உரையில் பார்க்கிறேன். அதில் முதல் வாக்கியத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

அவர் உருவாக்கிய பாசறையில் இருந்து வந்தவன் நான். அதில் வார்ப்பிக்கப் பட்டவன். பேரறிஞர் அண்ணா அவர்களைக் காலம் விரைவாகக் கொத்திக் கொண்டு போனதால் ஏற்பட்ட துன்பங்களை எண்ணி, இன்று வரையிலும் கலங்கு கின்றவன்.

ஆக்கிரமிப்பாளனை அழைத்துப் பேசுகின்றீர்கள்: அமைதி வழியில் கேட்டால், புறக்கணிக்கின்றீர்களே?

அண்ணா பேசுகிறார், Madam Deputy Chairman; It is a painful pardaox that we are discussing today the amendment of the constitution, to give a legal weapon to the government v‹W brhšÈÉ£L, to pull down not an antagonist, but a protagonist for a cause எப்படிப்பட்ட காலகட்டத்தில், when we are meeting the Chinese aggressor, we are in the discussion table for a negotiation;

சீன ஆக்கிரமிப்பாளர்கள், இமயத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றிக் கொண்ட வேளை. நம் படை வீரர்களைப் பலியாக்கியவர்கள், ஆக்கிரமிப்பாளர்களை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று இந்திய அரசு அழைத்து இருக்கின்ற நேரத்தில், அப்போதுதான் போர் நிறுத்தம் வந்த நேரத்தில், பேச வாருங்கள் என்று அழைத்து இருக்கின்றபொழுது, நீங்கள் ஒரு கருத்தைத் தடுப்பதற்காக, ஒரு கொள்கையைச் சொல்லுகின்றவனுடைய கருத்தைத் தடுப்பதற்காக, அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து இங்கே விவாதிப்பது ஒரு வேதனையான, விசித்திரமாக இருக்கின்றது.

‘It is a painful paradox’’ என்று தொடங்கி, Protagonist என்ற சொல்லைப் பயன்படுத்தி அண்ணா கூறுகிறார்.

அவர் அந்தச் சொல்லை எப்படிப் பயன் படுத்தினார் என்பதை நான் எண்ணிப் பார்த்தேன். புரோட்டகானிஸ்ட் ‘Protagonist’ என்பது ஒரு கிரேக்கச் சொல்.

ஒரு காவியத்தில் அல்லது ஒரு கவிதை நாடகத்தில், மூன்று பாத்திரங்கள் இருப் பார்கள்.

ஒரு இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுகிறவன், புரோட்டகானிஸ்ட் (Protagonist).

அடுத்து வருவது டியூட்ராகானிஸ்ட். (Deutragonist).

அவன் உடந்தையாகவும் இருக்கலாம்; அல்லது விலகியும் செல்லலாம். (குழப்பவாதி; சந்தர்ப்பவாதி)

அடுத்தது, டிரைடகானிஸ்ட் (Deutragonist):-

அவன், துன்பங்களை, கேடுகளை விளைவிப்பவன்; இலட்சியவாதிக்கு எதிரான நிலை எடுப்பவன்.

இந்த மூவரும் சேர்ந்ததுதான் கிரேக்கத்தில் ஒரு காவியம், ஒரு இலக்கியம்!

அண்ணா அழகாக அந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றார்.

நான் ஒரு கொள்கையை முன்னெடுத்துச் செல்லுகிறேன். கிரேக்கத்தின் காவியங்களில் ஒரு இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுகிறவன் ‘புரோட்டகானிஸ்ட்’ என்று சொல்லப்பட்டான்; அப்படிப்பட்ட கருத்தை நான் இங்கே முன் வைப்பதைத் தடுப்பதற்கு, ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து இருக்கின்றீர்களே?

சீன ஆக்கிரமிப்பாளனை அழைத்து, ஒரு மேசையில் அமர வைத்துப் பேச முற்பட்டு விட்ட இந்த அரசு, எங்களை ஏன் அழைத்துப் பேச முற்படவில்லை?

நான் திராவிட நாடு கேட்டேன். நாகர்களுக்குத் தனிநாடு கேட்ட பிஜோவைப் போல என்று, வரலாறு தெரியாதவர்கள் சொல்லுகின்றார்கள். நாங்கள் பிஜோவைப் பார்த்துக் கேட்கவில்லை.

நாங்கள் தனிநாடு கேட்கிறோம். எங்களை ஏன் அழைத்துப் பேசவில்லை? தேசிய ஒருமைப் பாட்டுக்குழு (National Integration Committee) ஒன்றை அமைத்து இருக்கின்றீர்கள். அதற்குத் தலைவராக யாரைப் போட்டு இருக்கின்றீர்கள்? ஒரு வலிமையான மனிதரை. தேசிய ஒருமைப்பாட்டில் உறுதியான, திறமையான ஒரு மனிதரை. அந்தக் கொள்கைக்காகவே இருக்கின்ற சர் சி.பி. இராமசாமி அய்யரை அல்லவா அதற்குத் தலைவராக அறிவித்து இருக்கின்றீர்கள்? அவர் யார்?

அவர்தான், 1947 ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா விடுதலை பெற்ற நாளில், திருவிதாங்கூர் திவானாக இருந்து கொண்டு, ‘இனி திருவிதாங்கூர் சமஸ்தானம் தனிநாடு’ என்று மன்னரைப் பிரகடனம் செய்ய வைத்து, பாகிஸ்தானோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர். இன்று, அவரைத் தான், இந்திய தேசிய ஒருமைப் பாட்டுக் குழுவுக்குத் தலைவராக நியமித்து இருக்கின்றீர்கள்.

நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று கருத்துகளைக் கேட்பதற்காக, ஒருமைப் பாட்டுக் குழுவினர் பயணித்தார்களே, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏன் அழைத்துப் பேசவில்லை? எங்களை ஏன் சந்திக்கவில்லை? என்னை ஏன் சந்திக்கவில்லை? என்று நான் கேட்கவில்லை.

ஏனென்றால், நாங்கள் அரசாங்கத்தின் விருந்தாளிகளாக வேலூர் சிறைக்குள் இருந்தோம். சின்னச் சின்னக் கொட்டடிகளுக்கு உள்ளே அடைக்கப்பட்டு இருந்தோம்.

ஆனால், எங்கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன் வெளியில் இருந்தாரே? எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரன் வெளியில் இருந்தாரே? எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாராம் வெளியில் இருந்தாரே? அவர்களை அழைத்துப் பேசி இருக்கலாமே?

சி.பி.இராமசாமி அய்யர் சிறைக்கு வந்து என்னைப் பார்க்கவில்லை என்று நான் கூற மாட்டேன். நான் மிகச் சாதாரணமானவன். அவர் பெரிய மனிதர். அவர் பிறரைச் சிறைக்கு உள்ளே அடைத்துத்தான் பழக்கப்பட்டவரே தவிர, சிறைக்கு உள்ளே போய்ப் பார்த்துப் பழக்கப்பட்டவர் அல்ல.

கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள ஏன் தயக்கம்? தமிழ்நாட்டில் 50 இலட்சம் வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் ஆட்சியில் இருக்கின்றது. நாங்கள் 35 இலட்சம் வாக்குகளைப் பெற்று இருக்கின்றோம். காலம் சீராகச் செல்லுமானால், அடுத்த தேர்தலுக்குப் பிறகு, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆட்சியில் இருக்கும்.

எங்கள் கருத்து தவறு என்றால் திருத்துங்கள். கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கே இடம் கிடையாதா? ஒரு கருத்தை நசுக்குவதற்காக இப்படி ஒரு சட்டமா? நாங்கள் சொல்லுகின்ற கருத்து தவறாக இருந்தால், எங்களைத் திருத்துங்கள். உங்களிடம் நல்ல ஆழமான, ஆணித்தரமான கருத்து இருந்தால், அதைக் கொண்டு, எங்கள் கருத்திலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள். ஆனால், எங்களை வற்புறுத்தாதீர்கள். உங்கள் கருத்தை எங்கள் மீது திணிக்காதீர்கள்.

இப்படியெல்லாம் அருமையாக அவர் கருத்துகளை எடுத்து வைத்த வாதம், அரசியல் சட்டத்தின் 6 ஆவது திருத்தத்தின்போது நடந்தது.

அப்போதுதான், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதை ஏற்க முடியாது என்ற சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.

அதற்குப் பிறகுதான், 1967 இல், Ulnawful Activities Prevention Act சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அது பின்னர் புதிய புதிய வடிவங்களை எடுக்கின்றது.

Maintenance of Internal Security Act -MISA என்றார்கள். Prevention of Terrorism Act-POTA என்று ஒரு வடிவத்தை எடுக்கிறது. அதே பிரிவுகளைக் கொண்டுதான் இன்றைக்கும் Ulnawful Activities Prevention Act சட்டம் இருக்கின்றது. அதன் அடிப்படையில்தான் ஒரு இயக்கம் தடை செய்யப்படுகின்றது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு இருக்கின்றது.

அந்தத் தடை தவறானது என்று நான் தீர்ப்பு ஆயத்திலும், உயர்நீதி மன்றத்திலும் வாதாடுகின்ற பொழுது,

‘அவர்கள் கேட்கின்ற தமிழ் ஈழம், இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எவ்விதத்தில் கேடு விளைவிக்கின்றது? அது எப்படி ஆபத்தானது? அவர்கள் கேட்கின்ற தமிழ் ஈழத்தில், தமிழகத்தின் ஒரு அங்குல மண்ணைக் கூடக் கேட்கவில்லை. தந்தை செல்வாவோ, மாவீரர் திலகம் பிரபாகரனோ கேட்கவில்லை. ஆனால், தமிழகத்தையும் சேர்த்து அவர்கள் தமிழ் ஈழம் அமைக்கப் போவதாக, பொய்யாக, மத்திய அரசு வகுத்து இருக்கின்ற, அபாண்டங்கள் நிறைந்த வழக்குகள் மூலமாக, இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்து இருக்கின்றார்கள். அது செல்லாது; அதை நீக்க வேண்டும்’ என்று என் வாதங்களை எடுத்து வைத்து இருக்கின்றேன்.

வடக்கு எல்லைக்குச் செல்வோம்.

இப்போது, இந்தியாவின் நிலைமையைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். 1947 ஆகஸ்ட் 15 இந்தியா விடுதலை பெற்றது. பாகிஸ்தான் பகுதியில் இருந்து பழங்குடியினரும், பாகிஸ்தான் படையினரும் ஆயுதங்களோடு காஷ்மீருக்கு உள்ளே ஊடுருவி விட்டார்கள் என்று, காஷ்மீர் மன்னர் ஹரிசிங், நேருவுக்குத் தாக்கல் அனுப்புகின்றார். ‘எங்களைப் பாதுகாக்க வாருங்கள்; இந்தியப் படைகளை அனுப்புங்கள். இந்தியாவோடு காஷ்மீரை இணைப்பதற்கு நான் ஒப்புதல் தருகின்றேன்; அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறேன் என்கிறார்.

அப்போது, இந்தியாவில் இருந்த சமஸ்தானங்கள் எல்லாம், இந்திய யூனியனோடு இணைந்து கொண்டு இருந்த காலம். அதுபோல, எங்கள் காஷ்மீரமும் இணையும் என்று, அக்டோபர் 26 ஆம் தேதி, காஷ்மீர் மன்னர் ஹரிசிங் தகவல் தருகின்றார்.

நேருவின் உறுதிமொழிகள்:-

அன்றைக்கே, இங்கிலாந்து பிரதமர் கிளமெண்ட் அட்லிக்கு, 1947 அக்டோபர் 26 ஆம் தேதியே, இந்தியப் பிரதமர் நேரு கடிதம் எழுதுகின்றார்.

‘காஷ்மீருக்கு உள்ளே நாங்கள் படையை அனுப்ப நேர்ந்தது. ஆனால், காஷ்மீர் மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். They have to decide their destiny.

இந்தியாவோடு இருப்பதா? விலகுவதா? தனிநாடாக ஆவதா? என்பது, காஷ்மீர் மக்களுடைய முடிவு. They have to give their consent.

அதை, பொது வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றுவோம். We will decide it a by a plebiscite.

இவ்வாறு கடிதம் எழுதிய நேரு, நவம்பர் 2 ஆம் தேதி, அனைத்து இந்திய வானொலியில் உரை ஆற்றியபோதும், இதே கருத்தைச் சொல்லுகின்றார். ‘காஷ்மீரத்தின் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டிய கடமை, பொறுப்பு, காஷ்மீர் மக்களுக்குத்தான் உண்டு. அது, வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறும்’ என்று வானொலியில் அறிவித்து விட்டு, பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்கு, ‘நாங்கள், வாக்கெடுப்பில் காஷ்மீர் மக்கள் முடிவுக்கு விட்டு விடுவோம்’ என்று கடிதமும் அனுப்புகிறார். மறுநாள், நவம்பர் மாதம் 3 ஆம் தேதியும் வானொலியில் பேசுகிறார். அதனையே வலியுறுத்துகிறார்
.
1948 மார்ச் 5 அரசியல் நிர்ணய சபை (Constituent Assembly)யில் நேரு பேசு கின்றார்.

We have given a promise, not only to the union, but to the United Nations, to the whole world, that the fate of the Kashmir will be dcided by the people of Kashmir; That will be decided by a plebiscite.

நாம் ஒரு வாக்குக் கொடுத்து விட்டோம். We stood by it; we stand by it and we will stand by it.

இந்த வாக்குறுதியில் நாங்கள் உறுதியாக இருப்போம்’
என்கிறார்.

1951 இல், லண்டனுக்குப் போகின்றார். ஜனவரி 16. செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அவர்கள் கேட்கிறார்கள். அப்போது சொல்லுகின்றார்: ‘We have made a commitment for a plebiscite in Kashmir. காஷ்மீரில் ஒரு பொது வாக்கெடுப்பு நடக்கும். அதன்படி, அந்த மக்கள் முடிவு செய்வார்கள்.’

மீண்டும், 1952 மார்ச் 26, ஆகஸ்ட் 7 ஆகிய நாள்களில், இந்திய நாடாளுமன்றத்தில் உரை ஆற்றும்போதும், இதையே குறிப்பிடுகின்றார்.

‘நாம் வாக்குக் கொடுத்து விட்டோம். ஒருவேளை, காஷ்மீர் நம்மை விட்டு விலகிச் செல்வதாக முடிவு எடுத்தால், நம் இருதயங்கள் காயப்படலாம்; ஆனால், உலகத்துக்குக் கொடுத்த வாக்குறுதியை நாம் நிறைவேற்றித் தீர வேண்டும். என்கிறார். 1954 ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தில் பேசும்போதும், அதே கருத்தை மீண்டும் பேசி பதிவு செய்கின்றார்.

நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும்தான் இங்கே பதிவு செய்கின்றேன்.

பத்து ஆண்டுகள் கழிகின்றன. 1964. முகமது கரீம் சாக்ளா, மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, இந்தியாவின் கல்வி அமைச்சராக, ஐ.நா. சபையில் பேசுகின்றார்.

1947 முதல் 1954 வரையிலும், பண்டித நேரு, உலகத்துக்கும், ஐ.நா. மன்றத்துக்கும், இந்திய நாடாளுமன்றத்துக்கும், அரசியல் நிர்ணய சபைக்கும் தெரிவித்த கருத்து, காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு.

எது பொது வாக்கெடுப்பு?

இப்போது, 64 இல் சாக்ளா பேசுகின்றார்.

பொது வாக்கெடுப்பா? காஷ்மீரில் தான் நாங்கள் மூன்று பொதுத் தேர்தல்களை நடத்தி விட்டோமே? அதுதான், பொது வாக்கெடுப்பு. அதைத் தவிர வேறு எதுவும் நடைமுறையில் சாத்தியம் இல்லை. பாகிஸ்தானில் பலூச் மக்கள் கேட்கின்றார்கள்; பக்டூனிஸ்தான் மக்கள் கேட்கின்றார்கள்; பட்டாணியர்கள் கேட்கின்றார்கள்; கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கேட்கின்றார்கள்; அங்கெல்லாம் நீங்கள் பொது வாக்கெடுப்பு நடத்துவீர்களா? என்று கேட்கின்றார்.

இப்படி இந்தியா தன் நிலையை மாற்றிக் கொண்டது.

சோவியத் ஒன்றியத்தின் அரசியல் சட்டத்தில் பிரிந்து போகும் உரிமை உண்டு; சீன அரசியல் சட்டத்தில் பிரிந்து போகும் உரிமை உண்டு; பின்னர் அகற்றப்பட்டது; பர்மா சட்டத்தில் உரிமை உண்டு; பின்னர் அகற்றப்பட்டது. இந்தியாவில், காஷ்மீரத்தில் பொது வாக்கெடுப்பு குறித்து மேற்கொள்ளப் பட்ட நிலைப்பாடு, பின்னர் மாற்றிக் கொள்ளப்பட்டது.

பொது வாக்கெடுப்பின் வகைகள்:-

ஒரு பொது வாக்கெடுப்பு என்பது எப்பொழுது வருகின்றது?

ஒரு தேசிய இன மக்கள், தங்களுடைய சுய நிர்ணய உரிமையை, தன்னாட்சி உரிமையை நிலைநாட்டிக் கொள்ள பொது வாக்கெடுப்பு வருகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டில், ஒரு குறிப்பிட்ட மக்கள், இதுகுறித்து வாக்கெடுப்பு வேண்டும் என்று, அவர்கள் கையெழுத்து இட்டுக் கோரிக்கை வைத்தால் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

பொது வாக்கெடுப்பு என்பது, இரண்டு விதமாக அமையலாம். ஒரு நாட்டின் எல்லைகளைத் தீர்மானிக்க; ஒரு நாடு, இன்னொரு நாட்டின் பகுதியாகச் சேருவதற்கு அல்லது பிரிந்து செல்லுவதற்கு; அல்லது, பன்னாட்டு ஒப்பந்தங்களை ஏற்க அல்லது மறுக்க. இது ஒருவிதமான பொது வாக்கெடுப்பு.

ஒரு நாட்டுக்கு உள்ளேயே பொது வாக்கெடுப்பு நடத்தலாம். (Domestic Referendum) ஓரு குறிப்பிட்ட பிரச்சினையை ஏற்க அல்லது மறுக்க; எடுத்துக் காட்டு, மதுவிலக்கு. மது வேண்டுமா? வேண்டாமா? என்று கூட ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தலாம்.

நோர்வேயின் தோற்றம்:-

இந்த அடிப்படையில், தேசிய இனங்கள், தங்கள் சுதந்திரத்தைத் தேடிக் கொள்ளத் தொடங்கியதன் விளைவாக, 1905 ஆகஸ்ட் 13 இல், அதுவரை ஒன்றாக இருந்த ஸ்வீடனில் இருந்து பிரிந்து செல்வதற்காக, நோர்வே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தியது. இத்தனைக்கும், நோர்வே மக்களை, சுவீடன்காரர்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை. நோர்வீஜியப் பெண்களுக்குப் பாலியல் கொடுமைகளை விளைவிக்கவில்லை. நோர்வீஜியர்களின் வழிபாட்டுத் தலங்களை, ஸ்வீடன்காரர்கள் அழிக்கவில்லை. இராணுவத்திலோ, அரசுப் பணிகளிலோ, நோர் வீஜியர்களுக்கு இடம் இல்லாமல் செய்ய வில்லை. இருவரும், சம அந்தஸ்து உள்ளவர்களாக இருந்தார்கள். சம உரிமை உள்ளவர்களாகவே இருந்தார்கள்.

ஆனாலும்கூட, நாங்கள் தனி இனம்; தனித்து வாழ்வோம் என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 100 விழுக்காடு நோர்வீஜியர்களும், சுவீடனில் இருந்து பிரிந்து செல்வோம் என்று முடிவு எடுத்தார்கள்.

ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிடுகின்றேன். 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில், தெற்கு ஆசிய பிராந்திய அமைதி மாநாட்டில் நான் பேசினேன்.

உலகம் தமிழர்களை அநாதைகளாகக் கைவிட்ட வேளையில், ஆண்டன் பாலசிங்கம் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த நேரத்தில், மரணத்தின் வாசலில் இருந்த அவரை அழைத்துக் கொண்டு வந்து, பழுதுபட்ட இரு சிறு நீரகங்களையும் மாற்றி, மாற்றுச் சிறுநீரகங்களைப் பொருத்தி, அவரது உயிரைக் காப்பாற்றிக் கொடுத்த நோர்வே நாட்டுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன் என்று நான் பேசினேன்.

இரண்டாவது நாள் அமர்வுக்கு, ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஒரு சகோதரி தலைமை தாங்கினார்.அமர்வில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அப்போது, எனக்கும், சிங்கள நாட்டில் இருந்து வந்த பௌத்த பிட்சுகளுக்கும் வாக்குவாதம் வந்தது. மோதல் ஒன்றும் இல்லை.

புத்த பிட்சு சொன்னார்: Eelam is a day dream. It is a mirage; ஈழம் பகல் கனவு; அது கானல் நீர் என்று சொன்னார்.

நான் உடனே எழுந்து சொன்னேன்:

Sometime back, an independent Norway was considered as a day dream. But, Independent Norway has become a reality. Likethat, a day will come; Tamil Eelam will usher as a separate nation.

நோர்வே என்ற தனி நாடு அமைவது ஒரு பகல் கனவு என்று, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கருதினார்கள். ஆனால், அங்கே பொது வாக்கெடுப்பு நடந்தது. தனி நாடாக மலர்ந்து விட்டது. அதுபோல, தமிழ் ஈழமும் ஒரு தனி நாடாக அமையும் என்று நான் சொன்னேன்.இன்று, நோர்வே ஒரு தனி நாடாக மலர்ந்து விட்டது. இன்று நான் நோர்வேயில் இருந்து பேசுகிறேன் என்றேன்.

பிரிவுக்கு வாழ்த்துச் சொன்ன மன்னர்:-

1944 மே 22,23 ஆகிய நாள்களில், டென்மார்க் நாட்டின் பிடியில் இருந்து விடுபடுவதற்காக, ஐஸ்லாந்திலே பொது வாக்கெடுப்பு நடந்தது. 95 விழுக்காடு மக்கள் வாக்குப்பதிவில் பங்கு ஏற்றார்கள். அவர்களுள், 98 விழுக்காடு ஐஸ்லாந்து மக்கள், தங்கள் நாடு டென்மார்க் நாட்டின் பிடியில் இருந்து விடுபட்டு, தனி நாடாக ஆக வேண்டும் என்று ஆதரித்து வாக்கு அளித்தார்கள்.

இந்த முடிவை, டென்மார்க் நாட்டு மக்கள் ஏற்கவில்லை. வேதனை அடைந்தார்கள். காரணம் என்ன தெரியுமா? அப்போது டென்மார்க் நாடே நாஜி ஜெர்மனியின் பிடியில் இருந்தது. அங்கே ஸ்வஸ்திக் கொடி பறந்து கொண்டு இருந்தது. நாங்களே அடால்~ப் ஹிட்லரின் பிடிக்குள் சிக்கி இருக்கின்றோம். இந்த நேரத்திலா நீங்கள் வெளியேறுகின்றீர்கள்? இப்பொழுதா, எங்களை விட்டுப் பிரிந்து செல்லுகிறீர்கள்? நாஜிகளின் அடிமைப் பிடியில் இருக்கின்ற எங்களுக்கே இது துக்கமான நேரம் அல்லவா? என்று மனம் குமுறினார்கள்.

ஆனால், டென்மார்க் மன்னர் 10 ஆவது கிறிஸ்டியன்சன் என்ன செய்தார் தெரியுமா? “தனிநாடாகப் பிரிந்து செல்ல ஐஸ்லாந்து முடிவு எடுத்து விட்டது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவர்களுக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிவித்தார். வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

வரலாறு விசித்திரங்களைச் சந்திக்கின்றது. அதே டென்மார்க் நாட்டின் பிடியில் இருந்து, ~பரா என்ற ஒரு தீவு தனியாகப் பிரிந்து செல்ல முடிவு எடுத்து, அவர்களும் பொது வாக்கெடுப்பு நடத்துகின்றார்கள்.

சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காக இப்படி அடிவயிற்றில் இருந்து குரல் கொடுக்கின்றானே? இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா? என்று நினைப்பவர்களுக்காக, இந்த வாதத்தை வைக்கின்றேன். இந்த ~பரா தீவின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா? 11 ஆயிரத்து 146 பேர்தான். அங்கே பொது வாக்கெடுப்பு நடக்கிறது. 1946 ஆம் ஆண்டு மே மாதம். முடிவு என்ன தெரியுமா?

5656 பேர் தனியாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்று வாக்கு அளிக்கின்றார்கள். 5490 பேர், பிரிந்து செல்லக் கூடாது, டென்மார்க்கோடுதான் இருக்க வேண்டும் என்ற வாக்கு அளிக்கின்றார்கள். அதாவது, 49.75 விழுக்காட்டினர் டென்மார்க்கோடு இருக்க வேண்டும் என்கிறார்கள். 50.25 விழுக்காட்டினர், தனிநாடாக வேண்டும் என்கிறார்கள்.

இந்த முடிவையும் டென்மார்க் ஏற்றுக்கொள்ள நேர்ந்தது. இன்றைக்கு அந்த ~பரா தீவுகள் ஒரு தனி நாடாக ஆகி விட்டது.

இந்த நிகழ்வுகளை நீங்கள் வரிசைப் படுத்திப் பார்க்கின்றபோது, இந்த நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்த இந்தக் காலகட்டத்தில், சோவியத் மண்டலமும் உடைகின்றது.

ரஷ்யாவின் நிலைமை:-

சோவியத் ஒன்றியத்தில் இருக்கின்ற நாடுகள் விரும்பினால் தனியாகப் பிரிந்து செல்லலாம் என்று அரசியல் சட்டம் வகுத்த ரஷ்யா, பின்னர் அதை மறந்து, கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் தன் ஆதிக்கப்பிடிக்குள் கொண்டு வந்து ஒடுக்க முயன்றது. யூகோஸ்லாவியாவின் மார்ஷல் டிட்டோ அதை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்த்தார். அந்த வேளையில், ஹங்கேரி நாட்டில் ஒரு புரட்சிக் குரல் எழுந்தது. அவரும், கம்யூனிஸ்ட் அமைப்பில் இருந்து உருவான ஒரு தலைவர்தான். ஹங்கேரி நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்தான். அவரது பெயர் இம்ரினாகி. ‘எங்கள் ஹங்கேரி நாடு, சுயேச்சையாகத்தான் முடிவு எடுக்கும்; சோவியத் ரஷ்யாவின் கட்டளைகளை, இனிமேல் நாங்கள் ஏற்கமாட்டோம்’ என்று அவர் தன்மானக் கொடியை உயர்த்தியபோது, ரஷ்யாவின் டாங்குகள், ஹங்கேரிக்கு உள்ளே நுழைந்தன.

அப்பொழுது அவர் மக்களைத் திரட்டினார். ஒரு மாலை வேளையில், பனி பொழிந்து கொண்டு இருந்த மலைச்சரிவுகளில் மழையும் கொட்டிய பொழுது, அவர் பேசியதைக் கேட்பதற்காக, இலட்சக் கணக்கான மக்கள் திரண்டு வந்தார்கள்.

இம்ரினாகி பேசிய போது, மழை வலுத்தது. ஒவ்வொரு வரும் குடை கொண்டு வந்து இருந்தார்கள். எல்லோரும் குடைகளை விரித்துப் பிடித்துக்கொண்டார்கள். அதற்கு உள்ளே நின்றுகொண்டு, கொட்டிய மழையிலும் இம்ரினாகியின் பேச்சைக் கேட்டார்கள். அந்த மழையிலும், அவரது பேச்சு அனலைக் கொட்டியது. மக்கள் மனங்களில் வேள்வியை மூட்டியது. மக்கள் அணி திரண்டு எழுந்தார்கள். அது ‘குடைப்புரட்சி’ என்று வரலாறு வர்ணிக் கின்றது.

சோவியத்தின் படை அணிகள், ஹங்கேரிக்கு உள்ளே நுழைந்தன. ஹங்கேரி ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இம்ரினாகி கைது செய்யப்பட்டார். 1958 ஜூன் மாதம் 30 ஆம் தேதி, தூக்கில் இடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

31 ஆண்டுகளுக்குப் பிறகு, 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி, அதே நாளில், இம்ரினாகி புதைக்கப்பட்ட இடம் எங்கே என்று தேடிக் கண்டுபிடித்து, ஒரு சின்னஞ்சிறிய கல்லறையைத் தோண்டி, அந்தச் சவப்பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து, குதிரைகள் பூட்டிய தேரில் வைத்து, பூக்களால் அலங்கரித்து, இலட்சக்கணக்கானவர்கள் இம்ரினாகிக்கு வாழ்த்து முழக்கங்களை எழுப்ப, ஹங்கேரி வீதிகள் வழியாகக் கொண்டு சென்று, ஒரு எழிலார்ந்த கல்லறையை அமைத்து, அங்கே அடக்கம் செய்தார்கள்.

இது ஹங்கேரி நாட்டில்!

1968 இல், செக்கோஸ்லோவேகியா, சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தை எதிர்த்தது. டூப்செக் (Dubcek) தலைமை தாங்கினார். அங்கும் சோவியத் படைகள் நுழைந்தன. புரட்சியை ஒடுக்கினார்கள். ஆனால், 1990 க்குப் பிறகு, நிலைமை மாறியது. 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி, திருச்சி மலைக்கோட்டை நகரில், இராணுவ மைதானத்தில், பிற்பகல் 1.45 மணிக்கு, இலட்சக்கணக்கானவர்கள் திரண்டு இருந்த திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில், உலகைக் குலுக்கிய புரட்சிகள் என்ற தலைப்பில் உரை ஆற்றுகின்றபொழுது, ஹங்கேரி குடைப் புரட்சியைச் சுட்டிக்காட்டிப் பேசினேன்.

‘சோவியத் ரஷ்யாவில், கிரெம்ளினுக்கு எதிரே குரல் கேட்கின்றது. தேசிய இனங்களின் விடுதலைக்குரல் கேட்கிறது. விண்வெளியில் ககாரினை நீந்த வைத்த சோவியத் ரஷ்யா, லைக்கா என்ற நாயை விண்வெளிக்கு அனுப்பி வைத்த சோவியத் ரஷ்யா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் படை அணிகளுக்கு அச்சத்தைத் தருகின்ற சோவியத் ரஷ்யா, ஹிட்லரின் நாஜிப் படைகள் லெனின்கிராடு, ஸ்டாலின் கிராடை முற்றுகை இட்டபோது விரட்டி அடித்த சோவியத் ரஷ்யா, உலகப் போரின் போக்கை மாற்றிக் காட்டிய கார்ல் மார்க்ஸ் தந்த மூலதனக் கொள்கைகளின் அடிப்படையில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டிய சோவியத் ரஷ்யா, பிற தேசிய இனங்களை ஒடுக்குகிறது; ஆனால், காலம் மாறும், நிலைமைகள் மாறும்; விடுதலைக் குரலை ஒடுக்க முடியாமல் போய்விடும்; சோவியத் தனித் தனி நாடுகளாக, துண்டுதுண்டாகப் போகின்ற காட்சியை வெகு சீக்கிரத்தில் காண்பீர்கள்’ என்றும் சொன்னேன்.

நான் ஒன்றும் ஆரூடக்காரன் அல்ல; முற்றும் உணர்ந்தவன் அல்ல; தொலை நோக்கோடு கண்டுபிடிக்கின்றவன் அல்ல; நான் வரலாறைப் படிப்பவன்; வரலாறைப் பார்ப்பவன்; வரலாறு பதிவு செய்த நிகழ்ச்சிகளைக் கண்டவன்; அதனால் சொன்னேன்.

அதுதான் நடந்தது, 91 டிசம்பரில். சோவியத் ஒன்றியத்தில் இருந்து குடியரசு கள் பிரிந்தன. 15 நாடுகள் மலர்ந்தன. ஜார்ஜியா தனி நாடு ஆயிற்று. அது ஒரு பொது வாக்கெடுப்பின் மூலமாகப் பிரிந்தது. 99 விழுக்காடு ஆதரவு.

ஸ்லோவேனியா, பொது வாக்கெடுப்பிலே தனி நாடு.

குரேஷியா, 91இல் பொது வாக்கெடுப்பில் தனி நாடு.

அலெக்சாண்டர் பிறந்த மாசிடோனியா, 91 இல் பொது வாக்கெடுப்பில் தனி நாடு.

92 இல் போஸ்னியா-ஹெர்சகோவினா, பொது வாக்கெடுப்பிலே தனி நாடு.

93 இல் ஆறு இலட்சம் மக்களை மட்டுமே கொண்ட எரித்ரியா பொது வாக்கெடுப்பில், 98 விழுக்காடு மக்கள் தனிநாடாக ஆவதற்கு ஆதரவு.

94 இல், ருமேனியாவின் பிடியில் இருந்து நாங்கள் தனி நாடாகப் பிரிந்து செல்கிறோம் என்று பொதுவாக்கெடுப்பில் அறிவித்தது மால்டோவா.
99 ஆகஸ்ட் 31 இல் கிழக்குத் தைமூரில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் ,78.5. விழுக்காடு மக்கள், இந்தோனேசியாவின் பிடியில் இருந்து விடுபட்டுத் தனிநாடாக ஆவதற்கு ஆதரவு. தனிநாடு ஆயிற்று.

2006 மாண்டிநீரோ தனிநாடு. பொது வாக்கெடுப்பில் நூல் இழையில்தான் வெற்றி. 55 விழுக்காடு தேவை என்றார்கள். 55.4 விழுக்காடு வாக்குகள் கிடைத்து, தனிநாடு ஆயிற்று.

2011. தெற்கு சூடான். பல இலட்சம் உயிர்கள் பலியிடப்பட்ட பிறகு, குருதி கொப்பளித்து ஓடியதற்குப் பிறகு, ஆயுதப் புரட்சி நடந்ததற்குப் பிறகு, பொருளாதார அடிப்படையில், தெற்கு சூடான் ஒரு தனி நாடாக இயங்க முடியாது; வடக்கு சூடானை அண்டித்தான் பிழைக்க வேண்டும்; இவர்கள் நில அடிப்படையில் தனி நாடாக ஆக முடியாது என்ற வாதங்களை எல்லாம் உடைத்து நொறுக்கி விட்டு, தெற்கு சூடான் தனிநாடு ஆகி விட்டது.

இன்றைக்கு என்ன நிலைமை?

இப்படி, 1936 க்கும் 60 க்கும் இடையில், கிட்டத்தட்ட 60 புதிய நாடுகள் மலர்ந்து இருக்கின்றன. தன்னாட்சி உரிமையைப் பெற்று இருக்கின்றன. 1950 ஜனவரி 1 முதல், 1959 டிசம்பர் 31 வரையில், பத்து ஆண்டுக் காலத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாகப் பதிவு செய்த நாடுகளின் எண்ணிக்கை, தன்னாட்சி உரிமை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை 106.

இதில், 99 நாடுகள், மற்ற அனைத்து நாடுகளாலும், சுதந்திர நாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆறு நாடுகள் அத்தகைய அங்கீகாரத்தைப் பெறவில்லை. ஒரு நாடு, முதலில் மறுக்கப்பட்டு, பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அடுத்து அறுபதுகள். அடுத்த பத்து ஆண்டுகளில், 1960 ஜனவரி 1 முதல், 1969 டிசம்பர் 31 வரையிலும், 163 நாடுகள் ஐ.நா. சபையில் பதிவு பெற்றன. அதில் 155 நாடுகள், சுதந்திர நாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பிறகு, 1970 ஜனவரி 1 முதல், 1979 டிசம்பர் 31 வரையிலும், 184 நாடுகள், உறுப்பு நாடுகள் ஆயின. அவற்றுள், 169 நாடுகள், சுதந்திர நாடுகளாக ஏற்கப்பட்டன.
அடுத்து, 1980 ஜனவரி 1 முதல், 1989 டிசம்பர் 31 வரையிலும், உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 184 தான். அவற்றுள், 171 நாடுகள் சுதந்திர நாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தொடருகிறது...

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment