Tuesday, May 16, 2017

போக்குவரத்துறை தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் தலையிட வேண்டும்-வைகோ அறிக்கை!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் கhலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கhன பணப் பயன்கள், ஓய்வூதியம், போக்குவரத்துக் கழகங்களின் அனைத்து பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகhண வரவு-செலவு வித்தியாசங்களை சரி செய்ய வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.4500 கோடியை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகை ரூ.1700 கோடி, பணியில் உள்ள தொழிலாளர்கள் நிலுவைத் தொகை ரூ.300 கோடியை உடனே வழங்க வேண்டும் போன்ற முக்கியமான 7 கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் முன்னிலையில், போக்குவரத்துத்துறை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

அரசு போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தனியார் பேருந்துகளை இயக்குவோம் என்று அறைகூவல் விடுப்பதும், அனுபவமில்லாத தற்கhலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்குவதும் சரியான அணுகுமுறை இல்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

கோடை விடுமுறை கhலத்தில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால், அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.

ஒரு இலட்சத்து 43 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றும் மிக முக்கியமான போக்குவரத்துத் துறையில், கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் தொழிலாளர்களுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

புழல் சிறையில் தம்மை சந்திக்க வந்த வழக்கறிஞர் கோ.நன்மாறன் அவர்களிடம் வைகோ அவர்கள் கூறிய இந்தக் கருத்துக்கள் அறிக்கையாக வெளியிடப்படுகின்றது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment