Thursday, August 31, 2017

சிறை என்பது தண்டிக்கும் இடம் அல்ல; சீர்திருத்தும் இடம்தான்; பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரை விடுதலை செய்க! வைகோ அறிக்கை!

சந்தர்ப்ப சூழ்நிலையால் நிகழ்ந்த சம்பவங்களால், கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தால், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப் படுகின்ற கைதிகள் அனைவரும் திருந்தாத குற்றவாளிகள் அல்ல. அவர்களில் பலர் சிறைச்சாலையில் திருந்தியவர்களாக மாறி, புதிய வாழ்க்கை வாழத் துடிக்கின்றார்கள். 

அண்மைக்காலமாக கோரமான படுகொலைகளைச் செய்கின்ற கூலிப்படையினர் பெரும்பாலும் சட்டத்தின் பிடியில் சிக்குவது இல்லை.அப்படியே கூண்டில் நிறுத்தப்பட்டாலும் அச்சத்தின் காரணமாக எவரும் சாட்சியம் அளிப்பது இல்லை. அத்தகைய கொடியவர்கள் சுதந்திரமாக உலவுகிறார்கள்; மேலும் மேலும் குற்றங்களைச் செய்து கொண்டே இருக்கின்றார்கள். 

ஆனால், ஆயுள் தண்டனை பெற்றோர், பத்து ஆண்டுகள் தண்டிக்கப்பட்டோர், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்ற காரணத்தால் விடுவிக்கப்படாமலேயே சிறைச்சாலைகளில் வாடுகின்றனர். அவர்களுள் பலர் இருபது ஆண்டுகள் கடந்தும் சிறையில் அல்லல்படுகின்றனர். அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னம் ஆகின்றன. அதனால், மரணத்தை விடக் கொடுமையான மனத் துன்பங்களுக்குச் சிறைவாசிகள் ஆளாகி உள்ளனர்.

இந்தியக் குற்ற இயல் நடைமுறைச் சட்டத்தில் 14 ஆண்டுகளுக்கு மேல் கைதிகளின் சிறைவாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம், 1978 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தபோது, இரு அவைகளிலும் எவரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், நான் ஒருவன் மட்டுமே அதனைக் கடுமையாக எதிர்த்துப் பேசி என் கருத்துகளைப் பதிவு செய்து இருக்கின்றேன்.  

மேலும், சிறைவாசிகளைப் பரோல் விடுப்பில் அனுப்புவது ஒரு மனிதாபிமான நடவடிக்கை ஆகும். குடும்பத்தினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது குடும்பத்தில் ஏற்படும் நற்காரியங்களில் பங்கு ஏற்கவோ, குடும்பத்தில் ஏற்படும் துயரச் சம்பவங்களில் அல்லது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய அவசியம் கருதியோ பரோல் விடுப்பு தரப்படுகின்றது. 

அப்படி விடுப்பில் செல்லும் சிறைவாசி, தவிர்க்க இயலாத காரணங்களால் குறிப்பிட்ட நாளில் சிறைக்குத் திரும்பி வர இயலாமல் ஓரிரு நாட்கள் தாமதம் ஏற்பட்டு விட்டால் கூட, இந்தியத் தண்டனைச் சட்டம் 224 பிரிவுகளின் கீழ் மேலும் தண்டிக்கப்படுகின்றனர். இதனால் பொது மன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப்படுவது கிடையாது. 

வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு சிறைவாசி, நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தால் பரோல் விடுப்பு கிடையாது என்பதும், எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை ஆகும். மேல் முறையீடு ஆண்டுக் கணக்கில் நீடித்துக் கொண்டே போகும்.  

சிறைச்சாலை என்பது தண்டிக்கும் இடம் அல்ல. சீர்திருத்தும் இடம் என்ற கோட்பாட்டை உலகில் பல நாடுகள் ஏற்றுக் கொண்டு உள்ளன. 

எனவே, சிறைவாசத்தில் திருந்திய மனிதர்களுக்கு மறுவாழ்வு அளிக்கின்ற வகையில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரையும், பரோல் விடுப்பில் ஒரு சில நாள்கள் தவறியவர்களையும் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசைக்  கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 31-08-2017 தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO-TN) சார்பில் NEET எதிர்ப்பு போராட்டம்!

NEET தேர்விற்கு எதிராக, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO-TN) சார்பில் இன்று 30.08.2017 காலை 10 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மறுமலர்ச்சி திமுக, திமுக, திக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட கட்சிகளின் மாணவர் அணிகள் மற்றும் இன்னும் பிற மாணவர் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டன.


பெரியார் அண்ணா வழியில் சமூக நீதி காப்போம் என மோடி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து நீட் எதிர்ப்பு போராட்டத்தில் முழங்கிய மதிமுக மாணவரணி மாநில செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் அவர்கள் பேசினார்.


ஓமன் மதிமுக இணையதள அணி

Wednesday, August 30, 2017

அரசுப் பள்ளிகளை தனியாரிடம் தாரை வார்க்க நிதி ஆயோக் பரிந்துரை-வைகோ கண்டனம்!

பாரதிய ஜனதா கட்சியின் அரசு அமைந்தவுடனே பிரதமர் மோடி மேற்கொண்ட முதல் நடவடிக்கை, நேரு உருவாக்கிய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, ‘நிதி ஆயோக்’ அமைப்பை ஏற்படுத்தியதுதான். தனியார் மயம், தாராளமயத்தை தீவிரமாக செயல்படுத்த நிதி ஆயோக் தான் மோடி அரசுக்குத் தேவையான அனைத்துப் பரிந்துரைகளையும் வழங்கி வருகிறது.

வேளாண் கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது; வேளாண்மைத் துறைக்கான மானியங்கள், உணவுத்துறைக்கான மானியங்களை இரத்து செய்தல், பொது விநியோகத் திட்டத்தை அடியோடு மூடுதல், பொது சுகாரதாரத்துறைக்கு அரசின் முதலீடுகளை முற்றாக இரத்து செய்துவிட்டு, தனியாரிடம் தாரை வார்த்தல் போன்ற மக்கள் விரோத பரிந்துரைகளை நிதி ஆயோக் அளித்து வருகிறது. இவற்றை நடைமுறைப்படுத்திட மோடி அரசு தீவிரமாக செயல்படுகிறது. தற்போது கல்வித் துறையை தனியார் மயமாக்கிட ஆபத்தான ஒரு பரிந்துரையை நிதி ஆயோக் மத்திய அரசுக்கு அளித்துள்ளது.


மூன்று ஆண்டுகளுக்கான திட்ட அறிக்கையை நிதி ஆயோக் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட்டு இருக்கிறது. இதில் “2010-2014 ஆம் ஆண்டில் 13,500 அரசுப் பள்ளிகள் அதிகரித்துள்ளது. எனினும் அரசுப் பள்ளிகளில் ஒரு கோடியே 13 இலட்சம் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் ஒரு கோடியே 65 இலட்சம் மாணவர்கள் சேர்ககை அதிகரித்துள்ளது.

2014-15 ஆம் கல்வி ஆண்டில் 3 இலட்சத்து 70 ஆயிரம் பள்ளிகளில் வெறும் 50க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். எனவே சரியாக செயல்பட முடியாத நிலையில் உள்ள அரசு பள்ளிகளை தனியாருடன் இணைந்து செயல்படுத்த அரசு முன்வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியில் கல்வித்துறை காவிமயமாகி வருவது மட்டுமின்றி, வர்த்தக மயம் ஆக்குவதற்கும் மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது. மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்திலும் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது.


பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2013-14 நிதி நிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு மொத்த பட்ஜெட் தொகையில் 4.5 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2017-18 வரவு செலவு திட்டத்தில் கல்வித்துறைக்கு வெறும் 3.8 விழுக்காடு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

1966 இல் கோத்தாரி ஆணையம் அளித்த பரிந்துரையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ழுனுஞ)6 விழுக்காடு கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், 50 ஆண்டுகளாக அந்த இலக்கை இன்னும் அடைய முடியவில்லை.


2014 -15 ஆம் ஆண்டில் கல்வித்துறைக்கு மத்திய பா.ஜ.க. அரசு 45,722 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைவிட 1,134 கோடி ரூபாய் குறைவு ஆகும். 2015-16 இல் 42,187 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. இதுவும் முந்தை ய ஆண்டைவிட 3,535 கோடி ரூபாய் குறைவு ஆகும்.

நிதி ஆயோக் பரிந்துரையின் பேரில் மற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக பள்ளிகளை தனியார் -அரசு பங்களிப்பு திட்டத்தின் மூலம் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் நடைமுறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கல்வித்துறையை முழு சுயாட்சி அதிகாரம் உள்ள அமைப்பாக மாற்றி, தனியார் நிறுவனங்களிடம் பள்ளிகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூறி வருகிறது.

கல்வித்துறை மத்திய -மாநில அரசுகளின் பொது அதிகார பட்டியலின் கீழ் வருவதால், மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது மட்டுமின்றி, பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பான இந்தியாவில், பா.ஜ.க. அரசு ஒரே கல்வி முறையை செயல்படுத்திடவும், ஏகபோக ஆதிக்கம் செலுத்தவும் முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.
ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் பழங்குடி இன பட்டியல் இன மக்கள் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்கும் நிலையை அடியோடு ஒழிப்பதற்கு மோடி அரசு திட்டமிடுவது ஆபத்தானது ஆகும். மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அளித்து வரும் மக்கள் விரோத பரிந்துரைகளை புறந்தள்ள வேண்டும்.


அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்தி தரம் உயர்த்திடவும், பொதுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தவும் மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 30-08-2017 தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Tuesday, August 29, 2017

மருத்துவக் கல்வி நீட் தேர்வில் ஊழல் மோசடிக்கு நீதி விசாரணை தேவை-வைகோ அறிக்கை!

‘நீட்’ தமிழக மாநில தரவரிசைப் பட்டியலில் வெளி மாநில மாணவ/மாணவியர்கள்: முறைகேடுகள் மூலம் பெற்ற இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில் உரிய நீதி விசாரணை தேவை!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் இளநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்கான மாநில தரவரிசைப்பட்டியலை தமிழக சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டது. தமிழக மாணவ, மாணவியர்கள் சேருவதற்குரிய மருத்துவ இடங்களின் தரவரிசைப்பட்டியலில் கேரளா உள்ளிட்ட பிற மாநில மாணவ, மாணவியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

‘நீட்’ திணிப்பின் மூலம் ஏற்கனவே மருத்துவக் கனவு தகர்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தமிழக மாணவச் செல்வங்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குரிய தரவரிசைப் பட்டியலில் கிட்டதட்ட 150 வெளி மாநில மாணவ/மாணவியர் பெயர்களும் தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குரிய தரவரிசைப்பட்டியலில் கிட்டத்தட்ட 1000 மாணவ/மாணவியர்கள் பெயர்களும் இடம்பெற்றிருப்பது தனி மனித தவறுதலாலோ கணினி தொழிற்நுட்ப  தவறுதலாலோ நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இதில், அரச நிர்வாகத்தினர் உட்பட சுகாதாரத்துறை அமைச்சர் வரையிலான தொடர்பு இருக்கவே வாய்ப்பு உள்ளது.

மருத்துவக் கல்லூரிக்குரிய தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்கள் இருப்பிடச் சான்றிதழ் பெறுவதற்குரிய வழிகாட்டுதல்கள் பற்றி தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையிலும் போலியான வீட்டு முகவரி கொடுக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டால் அம் மாணவ/மாணவி தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, கிரிமினல் குற்றமாக கருதி தண்டனை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில், போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு, சமீபத்தில் 9 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. 

தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு ஒரு கோடி வரை செலவாகும். தமிழக அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைந்த செலவே ஆகும் என்ற நிலையில் ‘போலி’ இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழகத் தரவரிசைப் பட்டியலில் பிற மாநில மாணாக்கர்கள் இடம்பெற்றிருப்பதைக் காணும்பொழுது, மிகப்பெரிய ஊழல் நடந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நீட் தேர்வு ஏற்கனவே சமூகநீதி, மாநில உரிமைகள் என அனைத்தையும் குழித்தோண்டிப் புதைத்துக்கும் என்று நாம் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் நம் மாணாக்கர்கள் பாதிக்கப்படுவதோடு நம் மாநில நிர்வாகம் மற்றும் கல்வித்தரம் மிகக் கீழ்த்தரமாக செயல்பட இத்தகைய ஊழல்கள் வழிவகுக்கும் என்ற கவலையும் வருகிறது.

தரவரிசைப்பட்டியலில் இத்தகைய முறைக்கேடு சாத்தியம் என்றால் நீட் தேர்வு நடத்துவதிலும் முறைகேடுகள் சாத்தியம்தானோ என்ற சந்தேகிக்கத் தோன்றுகிறது.

போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து விண்ணபித்த 9 மாணவர்களை சுகாதாரத்துறை நிர்வாகம் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தது வெறும் கண்துடைப்பு நாடகமே! வெளி மாநிலத்தை சேர்ந்த 1000 மாணவ, மாணவியர்கள் தமிழகத் தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறித்து முறையான நீதி விசாரணைத் தேவை! அதுவரை தமிழக அரசுக்கல்லூரிகளில் மருத்துவ கல்விக்கான கலந்துரையாடலை நிறுத்தி வைக்க வேண்டும். இம்முறைகேடுகளால் தங்களுக்குரிய மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கப்பெறாமல் பாதிக்கப்பட்டு பெறும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தமிழக மாணவ, மாணவியர்களுக்கு உரிய நஷ்டஈட்டை தமிழக சுகாதாரத்துறை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Monday, August 28, 2017

குமரி மாவட்ட இளைஞரணி கூட்டம்!

குமரி மாவட்ட இளைஞரணி சார்பில், மதிமுக மாவட்ட இளைஞரணி கூட்டம் நடந்தது.

இதில் ஏராளமான கழக கண்மணிகள், மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள இணி

Sunday, August 27, 2017

புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊழியர் இராஜ்குமார் மணவிழாவில் வைகோ வாழ்த்து!

தமிழக தலைநகர் சென்னையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரியும் இராஜ்குமார் அவர்களுக்கும், கார்முகில் அவர்களுக்கும் இன்று 27-08-2017 திருமண வரவேற்பு நிகழ்வு நடந்தது.

இந்த மண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்.

மதிமுக நிர்வாகிகளும் மணமக்களை வாழ்த்தினார்கள். இதில் திருமாவளவன், முத்தரசன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பாற்றினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

பாளை பகுதி செயலாளர் வடிவேல்பாண்டியன் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

இன்று 27-08-2017 காலை தேவர்குளத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பாளை மத்திய பகுதி செயலாளர் வடிவேல்பாண்டியன் மகன் அன்புசெல்வராஜ்_ஜெயலட்சுமி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்.  

உடன் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.  

ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, August 26, 2017

நெல்லையில் தென்மண்டல மதிமுக மாணவர் அணிக் கூட்டம்!

தென் மண்டல மதிமுக மாணவர் அணிக் கூட்டம், மாநில மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்களின் தலைமையில் நெல்லை புறநகர் மாவட்ட கழக அலுவலகமான சரஸ்வதி லாடஜ் 52 ஆம் எண் அறையில் இன்று 26-08-2017 எழுச்சியுடன் நடைபெற்றது. 

நெல்லை புறநகர் மாவட்ட கழக செயலாளர் தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உணர்ச்சியுரை ஆற்றினார். 

மாநில துணைச் செயலாளர்கள் முகவை செல்வராஜ், மகேஷ் சங்கர், சத்தியகுமாரன், மாவட்ட மாணவர் அமைப்பாளர்கள் மதியழகன், புகழ்முருகன், ஷாஜி, கண்ணன், ஜவகர், நெல்லை மாநகர் வெற்றிவேந்தன் மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் சார்பில் பால.சசிகுமார், மாரிச்சாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

கலிங்கப்பட்டி தொடங்கி மாநாடு நடைபெறுகிற தஞ்சை வரையிலான வாகன பரப்புரை பயணத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.


தகவல்: பால சசிகுமார்

ஓமன் மதிமுக இணையதள அணி

நெல்லை புறநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ!

நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று 26-08-2017 நெல்லை லாரா பாரடைசில் நடந்தது.

இதில் நெல்லை புறநகர் மாவட்ட கழக ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக செயலாளர்கள் கலந்துகொண்டு 5 ஆண்டு சங்கொலி சந்தாக்களை வழங்கினார்கள்.

கலிங்கப்பட்டி கிளை கழகம் 101 சந்தா கொடுத்து தமிழகத்தில் முதன்மை இடம் கிளைகழகமாக இருக்கிறது, மகாதேவர்பட்டி 4, பிள்ளையார்குளம் 5, முத்துரெட்டியப்பட்டி 5, சின்னையாபுரம்2, ஆவரம்பட்டி 2, ராமராஜபுரம் 1, வேதமுத்துநகர் 1, மேலமரத்தோணி 1, மேலமரத்தோணி கீழுர் 1.

 மொத்தம் 123 ஐந்தாண்டு சந்தாகள், புரவலர் 5.

மொத்தம் :2,89,800

இதில் நெல்லை மாவட்ட புறநகர், மாநகர் கழக செயலாளர் மற்றும் முன்னணியினர் கலந்துகொண்டார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி