Monday, August 7, 2017

திருமுருகன் காந்தியை சந்தித்தார் வைகோ!

மே 17 இயக்கத்தின் சார்பில், ஈழ தமிழர்களின் மீது சிங்கள அரசு நடத்திய இனபடுகொலை நடந்து 8 வருடங்கள் ஆன நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மெரினா கடற்கரையில் மே மாதம் மெழுகுவர்த்தி ஏந்தி இறந்த மாவீரர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்த வருடமும் நடக்க இருந்த போது தடை விதித்ததை எதிர்த்து மக்கள் மெரினா கடற்கரையில் கூடி நினைவேந்தல் நடத்த முயன்றனர்.

இதனால் மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மற்றும் சில தமிழ் அமைப்புகளை சேர்ந்த  தலைவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்று 07-08-2017 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment