Thursday, April 7, 2016

தேமுதிக -மக்கள் நலக் கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் இணைப்பு!

தேமுதிக அலுவலகத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது. அப்போது சகோதரர் நாகை திருவள்ளுவன் தலைமையிலான தமிழ்ப் புலிகள் கட்சியும், சகோதரி வீரலட்சுமி தலைமையிலான தமிழர் முன்னேற்றப் படையும் புர்வாங்கமான பேச்சுவார்த்தையின் படி தேமுதிக -மக்கள் நலக் கூட்டணியில் இணைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதான வீரலட்சுமி மலர்கொத்தும், நாகை திருவள்ளுவன் சால்வை அணிவித்தும் விஜயகாந்தை கவுரவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள், நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் அதை நியாய ப் படுத்த விரும்பவில்லை. திமுக மீது சுமத்தப்பட்ட ஆள் இழுக்கும் முயற்சி யை வெளிப்படுத்தியதை மறைக்கவே என் மீதான கருத்தியல் தாக்குதல். பத்திரிக்கை கள் வேண்டுமென்றே என் பேச்சை திரிந்து வெளியிடுகின்றன. பேசாததை எல்லாம் பேசியதாக வெளியிடுகின்றன. குற்றச்சாட்டுகளை மேலும் வலுவாக சொல்வேன். நான் அடங்கி போக மாட்டேன் உண்மைகளை வெளிப்படுத்துவதில். சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாமல் செயல்படுபவன் நான் என பேசினார்.

மேலும் மாமண்டூர் மாநாட்டை வெற்றி பெறச் செய்வோம் எனவும், கட்டுப்பாட்டுடன் மாநாட்டை நடத்தி காட்ட வேண்டும் என்றூம் விஜயகாந்த் அவர்கள் நிறைவுரை ஆற்றுவார் எனவும் வைகோ தெரிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment