Thursday, April 7, 2016

அத்வானி மனைவி மறைவிற்கு வைகோ இரங்கல்!

ம தி மு க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது மனைவி கமலா அம்மையார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

அத்துடன் வைகோ அனுப்பிய இரங்கல் கடிதத்தில் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்புள்ள திரு அத்வானி அவர்களுக்கு,

வணக்கம். தங்களுடைய அன்பு மனைவி கமலா அம்மையார் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மனிதநேயமும் விருந்தோம்பும் பண்பும் மிக்கவர் கமலா அம்மையார். நீங்கள் இருவரும் மனமொத்த தம்பதியராக ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி இல்லற வாழ்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தீர்கள் என்பதை நான் அறிவேன். நான் தங்கள் இல்லத்திற்கு வந்தபோதெல்லாம் அம்மையார் என் மீது காட்டிய பரிவும் பாசமும் மறக்க இயலாதது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்கள் இல்லத்திற்கு நான் வந்தபோது, உங்களுடைய திருமணம் மற்றும் குடும்ப நிகழ்வுகள் அடங்கிய புகைப்படத் தொகுப்பை எனக்குக் காண்பித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டீர்கள். அப்போது அம்மையார் உடல்நலக் குறைவுற்று இருப்பதையும் கூறினீர்கள்.

தங்களுக்கு நேர்ந்துள்ள பேரிழப்பு ஆற்றவொண்ணாதது.

என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அம்மையாருக்கு எனது அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள,
வைகோ
வைகோ தமது இரங்கல் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தலைமை நிலையம் மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
07.04.2016

Dear Shri Advani ji,

Vanakkam. I am shocked about the sad demise of your beloved wife Madam Kamala. She was a noble lady of humanism and hospitality. I do know that you were attached to each other like an ideal couple with deep dedication. I can never forget the kind affectionate hospitality shown to me by her whenever I visited your home.

When I came to your house last year in November, you gave me the privilege to see the photographs of your wedding and family functions. At that time, you also told me about her ailment. I could understand the unconsolable grief of yourself.

I extend my deep sorrow and homage, sharing your tears.

With regards,
Yours sincerely,
(Vaiko)

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment