Saturday, April 9, 2016

இசை முரசு நாகூர் ஹனிபா நூல் வெளியீட்டு விழாவில் வரலாற்று ஆசிரியர் செ.திவான் அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

வரலாற்று ஆசிரியர் செ.திவான் எழுதிய இசை முரசு நாகூர் ஹனிபா நூல் வெளியீட்டு விழா 09-04-2016 மாலையில் எழும்பூர் இம்பீரியல் வளாகம், சிராஜ் அரங்கம், சென்னையில் நடைபெற்றது. 

கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்க "இசை முரசு நாகூர் E.M. ஹனிபா" நூலை வைகோ அவர்கள் வெளியீட்டார், இதில்  இரா .முத்தரசன் , ஜி. ராமகிருஷ்ணன் , ஆளூர் ஷாநவாஸ் , தேமுதிக சார்பில் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போதே திருமாவளவனும் கலந்துகொண்டார்.

அந்த புத்தக வெளியீட்டு விழாவில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் புத்தக ஆசிரியரான வரலாற்று ஆசிரியர் செ.திவான் அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment