Tuesday, April 5, 2016

விவசாயிகள் போராட்டத்திற்காக மௌன விரதம் கலைத்து கோவில்பட்டி ரயில் மறியலில் வைகோ!

வைகோ அவர்கள் தனது தந்தையார் வையாபுரியார் 1973 ஏப்ரல் 5 ஆம் தேதி மறைந்ததையொட்டி அவரது நினைவு நாளான ஏப்ரல் 5 ஆம் தேதி கடந்த 43 வருடங்களாக மௌன விரதம் கடைபிடித்து வந்தார்.

ஆனால் இன்று விவசாயிகள் அறிவித்த ரயில் மறியல் போராட்டத்துக்காக முதல் முறையாக மௌன விரதத்தை கலைத்து, இன்று கோவில்பட்டியில் காலை 10.30 மணிக்கு ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டார். 

இரயில் நிலையத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைய முடியாதபடி தடைகள் அமைத்திருந்தனர்.

எனினும் தடைகளை உடைத்து வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கோவில்பட்டி இரயில் நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து வைகோ தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment