Monday, April 18, 2016

கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோயில், கன்னியாகுமரி தொகுதிகளில் வைகோ பிரச்சாரம்!

மார்த்தாண்டத்தில் இன்று 18-04-2016 மாலை விளவங்கோடு தொகுதி சி.பி.எம்.வேட்பாளர் செல்லச்சாமி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்கு சேகரித்தார். மேலும் கிள்ளியூர் தொகுதி வேட்பாளருக்கும் வாக்கு சேகரித்தார். 

மாலை குளச்சல் மற்றும் திங்கள்சந்தையில் குளச்சல் சட்டமன்ற தொகுதி ம.தி.மு.க வேட்பாளரும் ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தல்களில், அதிக வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் வந்தவருமான சம்பத் சந்திரா அவர்களுக்கு பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

இரவு 8:00 மணிக்கு அழகியமண்டபத்தில் பத்மநாபபுரம் தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் ஜெகநாதன் அவர்களுக்கு முரசு சின்னத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் வாக்கு சேகரித்தார். 



இரவு 9:00 மணிக்கு நாகர்கோவிலில் நாகர்கோவில் தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் இராணிசெல்வின் அவர்களுக்கு பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். 


இன்று இரவு 9:30 மணிக்கு சுசீந்திரந்தில் கன்னியாகுமரி தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் ஆதிலிங்கப்பெருமாள் அவர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment