Sunday, June 5, 2016

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் 121-ஆவது பிறந்தநாள், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் மலர் அஞ்சலி!

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களின் 121-ஆவது பிறந்தநாளையொட்டி இன்று (5.6.2016 ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவு இடத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் மலர்ப் போர்வை போர்த்தினார்.

 
சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் முராத் புகாரி, தென்சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கழககுமார், தென்சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் ப.சுப்பிரமணி, தலைமை நிலைய துணைச் செயலாளர் கே.வி.மலுக்காமலி மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment