Friday, June 24, 2016

மதிமுக சார்பில் ஜூன் 24 பஹ்ரைனில் இப்தார் நிகழ்வு!

பஹ்ரைன் ம.தி.மு.க வின் சார்பில் திவான் அவர்கள் எழுதிய திரு. நாகூர் ஹனீபா அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழா மற்றும் இப்தார் நிகழ்வு வல்லம் பசீர் தலைமையில் 24-06-2016 அன்று சிறப்பாக நடைபெற்றது, பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அலைபேசி மூலம் வாழ்த்துரை வழங்கினார்.

இந்த நிகழ்வில், அரங்கம் நிறைகிற வகையில் இஸ்லாமிய பெருமக்கள், தமிழ் சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய பஹ்ரைன் மதிமுகவினருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment