Friday, June 3, 2016

சோரம் போனவர்களை புறந்தள்ளிவிட்டு புத்துணர்வு பெற்ற தென் சென்னை!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மதிமுக தென் சென்னை மாவட்ட கழக செயலாளராக இருந்தவர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து வெளியேறினார். ஆனால் எந்தவித பாதிப்பிற்கும், கட்சி பணி தொய்விற்கும் உள்ளாகாமல் இருந்தது. எனவே மேலும், கழக செயற்ப்பாட்டை துரிதப்படுத்தும் வகையில், கழக பொதுச் செயலாளரும், தமிழின முதல்வருமான வைகோ அவர்களை தென் சென்னை மவட்டத்தை தென் சென்னை கிழக்கு, தென் சென்னை மேற்கு என பிரித்து, கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக,கழக மாநில தேர்தல் பணிகுழு செயாளராக பணியாற்றிய கழக குமார் அவர்களையும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக வழக்கறிஞர் சுப்பிரமணி அவர்களையும், நியமித்திருக்கிறார்.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கழக செயலாளர்கள் தங்கள் பணிகளை செவ்வையாக நிறைவேற்றி வெற்றி கனிகளை குவிக்கும் விதமாக செயலாற்ற ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். கழக கண்மணிகளும், புதிய பொறுப்பாளர்களுக்கு, ஒத்துளைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறொம்.

ஓமன் மதிமுக இணையதள அணி








No comments:

Post a Comment