Sunday, June 26, 2016

மல்லை சத்யா இல்ல திருமணத்தை நடத்தி வைத்தார் வைகோ!

மறுமலர்ச்சி திமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்களின் இல்ல திருமணம் தேசிங்குராஜா, தேவிகா தம்பதியருக்கு இன்று 26-06-2016 காலை 9 மணி அளவில் TRM திருமணமண்டபம் மாமல்லபுரத்தில் நடந்தது. 

இந்த திருமணத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைத்தார். அப்போது அவரது துணைவியார் திருமதி ரேணுகாதேவி அவர்களும் மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந்த திருமணத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராள்மானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பிலும், மணமக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment