Tuesday, June 28, 2016

காற்றோடு கலந்த அண்ணன் வடசென்னை செல்வா-க்கு ஓமன் மதிமுக கண்ணீர் அஞ்சலி!

அண்ணன் வடசென்னை செல்வா அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவசர பிரிவில் வருத்தமான நிலையில் இருக்கிறார் என்றதும் மிகுந்த வேதனையுற்றோம் . கடந்த ஓரிரு நாட்களாக இணையதள நேரலை அண்ணன் Ammapet G Karunakaran அவர்களிடம் விபரம் கேட்டறிந்ஹோம். ஆனால் அண்ணனுக்கு இன்றைக்கு அழைத்து விபரம் கேட்பதற்குள் அண்ணன் வடசென்னை செல்வா அவர்கள் இயற்கையுடன் கலந்துவிட்டார் என்ற செய்தியை இன்று 28-06-2016 காலை முகநூல் மூலம் கண்டதும் அதிர்ச்சியுற்றோம்.
நேற்றைய பொழுது சிறு முன்னேற்றம் இருக்கிறது என தகவல் வந்த போது சிறு ஆசுவாசம் அடைந்தோம். நண்பர்கள் அனைவருமே இணையத்தின் மூலமாகவே தங்களது வேண்டுதலை வெளிப்படுத்தினார்கள். ஆனாலும் இயற்கை அவரை அரவணைத்துக்கொண்டது.
அவரின் இரண்டு குழந்தைகளும் சிறு வயதிலே தந்தையை இழந்து தவிக்கிறார்கள் என நினைக்கும் போது மனம் கனமாகிறது. குழந்தைகளுக்கு மன தைரியமும், மனைவிக்கு ஆறுதலும் கிடைக்கட்டும்.
அண்ணன் வடசென்னை செல்வா அவர்கள் இடைவிடா இணையதள போராளி. அண்ணனே! நீங்கள் காட்டிய பாதையிலே இணையத்தின் கழக கண்மணிகள் நாங்கள் உறுதியோடு பயணிப்போம். அண்ணன் குடும்பத்தாருக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்
ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment