Thursday, February 2, 2017

சுப.தமிழ்செல்வன் நினைவு ஊர்வலத்தில் வைகோ பங்கெடுத்ததற்கு திமுக தொடர்ந்த வழக்கு மார்ச் 10 க்கு ஒத்திவைப்பு!

விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டதையொட்டி, சென்னையில் நினைவு ஊர்வலம் நடத்தியதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது, தி.மு.க. அரசு வழக்குப் பதிவு செய்யதது.

அந்த வழக்கு இன்று 2-2-2017 ல் எழும்பூர் 13-ஆவது நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரக்ணைக்கு வந்ததால், வைகோ எழும்பூர் 13-ஆவது நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ அவர்கள், தமிழ் செல்வன் கொல்லப்பட்டார். 2007 நவம்பர் 2 ஆம் தேதி அன்று, பழ நெடுமாறன் உள்ளிட்ட 300 பேரும் நாங்கள் அஞ்சலி ஊர்வலமாக புறப்பட்ட போது காவல்துறை தடுத்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்கள் 15 நாள்.

2009 ன் தொடக்கத்தில்தான் முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள், முத்துகுமார் தீக்குழித்து மடிந்த பின்னர், நான் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்ததால் தொடர்ந்து என் மீது பல வழக்குகள் போடப்பட்டன. அப்படி போடப்பட்ட வழக்குகளில் ஒன்றுதான் இந்த வழக்கு.  சம்பவம் நடந்து 10 வருடம் ஆயிற்று. வழக்கு பதிவு செய்யது கிட்டதட்ட 8 வருடம் ஆயிற்று. சம்மன் கூட அனுப்பவில்லை.

இதனுடைய விளைவு என்னை எப்படி பாதிக்கிறதென்றால்,  ஆண்டு தோறும் கடவுச்சீட்டு புதுப்பிக்க நீதிமன்றத்திலிருந்து ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதள் பெற வேண்டும். நீதிபடி அவர்களிடம் சொன்னேன், ஒவ்வொரு வருடமும் பாதிப்பு இருக்கிறது. வழக்கை துரிதபடுத்த சொல்லுங்கள். சம்மன் கூட அனுப்புறதில்லை. நானாகதான் வந்து முன்னால் சரண்டர் ஆனேன் என்று சொன்னேன்.

அதற்கு நீதிபதி அவர்கள் 258 கீழ் மனு தாக்கல் செய்ய கூறியிருக்கிறார். மனு தாக்கல் செய்ய ஏற்ப்பாடு செய்திருக்கிறேன்.-மார்ச் 10 ஆம் தெதி இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 10 ஆம் தேதிதான் சீம கருவேல மர வழக்கில் நான் மதுரை உயர் நீதிமன்றத்தில் வாதாட வேண்டும்.

என் மாதிரி வாய்ப்பு தமிழ்நாட்டில் யாருக்கும் கிடைக்காது. 2 நாளைக்கு முன சீமகருவேல மரம் அகற்ற வாதாடினேன். இன்று 2-2-2017 ல் விடுதலை புலிகளுக்காக ஊர்வலம் சென்றதற்காக குற்றவாளி கூண்டில் நிற்கிறேன். இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. அண்ணன் கலைஞருக்கு நன்றி என கூறி பேட்டியை முடித்தார் வைகோ.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment